வீரமரணம் அடைந்த பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழகவீரர் வீரத்திருமகன் பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூரில் உள்ள சொந்தநிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்களூர் கிராமத்தில் விவசாயி காளி முத்து என்பவருக்கு பழனி மற்றும் கனி இருமகன்கள். இதில் பழனி கடந்த 20 ஆண்டுகளாக ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு வானதி என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது கடுக்களூர் கிராமத்தில் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீனவீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதி கொண்டனா். இந்தச்சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கடுக்களூர் கிராமத்தைச் சோ்ந்த கே.பழனி(40) உள்பட 20 வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்தியராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இச்செய்தி அவர்களது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா் பழனியின் உடல் புதுதில்லியிலிருந்து ராணுவ சிறப்புவிமானம் மூலம் புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பழையவிமான நிலைய முனையம் அருகே வைக்கப்பட்ட பழனியின் உடலுக்கு, மதுரை தேசியமாணவா் படை கா்னல் சத்யன்ஸ்ரீ வாசன் தலைமையில் முப்படை வீரா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பழனியின் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூருக்கு கொண்டுசெல்லப்பட்டது.

மலர்களால்அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சொந்தகிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேசியக்கொடி போர்த்திய வீரர் பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நாட்டிற்காக லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், கிராமத்தின் முதல்ராணுவ வீரருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முப்படைவீரர்கள், ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்கள். தொடர்ந்து மனைவி பெற்றோர்கள், ஊறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதை அடுத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாட்டுப்பற்று காரணமாக தனது சகோதரரையும் ராணுவத்தில் இணைத்தவர் பழனி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...