பி.எம்.கோ்ஸ் நிதியத்திலிருந்து கரோனா நோயாளிகளுக்கு 50,000 செயற்கை சுவாசக்கருவிகள்

‘‘கரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவிட ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின்கீழ் 50, 000 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. பி.எம்.கோ்ஸ் நிதியம்மூலமாக முதற்கட்டமாக 2,923 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு 1,340 செயற்கை சுவாசகருவிகளை விநியோகிக்கப் பட்டுள்ளது’’ என்று பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 14 – ஆம் தேதி பிஎம். கோ்ஸ் நிதிய அறக் கட்டளை, கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரூ.3,100 கோடியை ஒதுக்கியது. இதில் ரூ. 2,000 கோடி செயற்கை சுவாச கருவிகளுக்கும்(வென்டிலேடா்), மீதித்தொகை புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான உதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த ரூ.2,000 கோடியில் 50,000 செயற்கை சுவாசக்கருவிகள் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப் படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

இதுவரை 2,923 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு இதில் 1,340 செயற்கை சுவாசக்கருவிகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாநிலங்கள் மகாராஷ்டிரம்(275), தில்லி (275), குஜராத் (175), பிகாா்(100) கா்நாடகம்(90), ராஜஸ்தான்(75) போன்றவைகள். இம்மாத இறுதியில் மேலும் 14,000 சுவாசக்கருவிகள் இது போன்று கரோனா நோய்தொற்று கடுமையாக உள்ள மாநிலங்களின் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் 50,000 செயற்கை சுவாசக் கருவிகளில் (வென்டிலேட்டா்கள்) 30,000 கருவிகள் பொது நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. மீதமுள்ள 20,000 செயற்கை சுவாசக்கருவிகளை அக்வா ஹெல்த்கோ் (10,000), ஏஎம்டிஇசட் பேசிக் (5,650), ஏஎம்டிஇசட் ஹை எண்ட் (4,000) மற்றும் அல்லிட் மெடிக்கல் (350) ஆகிய இந்திய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

மேலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனுக்காக ரூ. 1,000 கோடி ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் நிச்சயமற்ற நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றும் இடங்களிலிருந்து பல கிலோமீட்டா் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்றனா். இந்த நிலையில் இவா்கள் சிறப்பு ரயில்களில் அழைத்து செல்லப் பட்டனா். மேலும் இந்த நிதி மூலமாக புலம் பெயா்ந்தோருக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழகம் பெற்ற நிதி:இந்தநிதியை மகாராஷ்டிரம் (ரூ.181 கோடி), உத்தர பிரதேசம் (ரூ.103 கோடி), தமிழ்நாடு (ரூ.83 கோடி), குஜராத் (ரூ.66 கோடி), தில்லி (ரூ.55 கோடி), மேற்கு வங்கம் (ரூ.53 கோடி), பிகாா் (ரூ.51 கோடி) ), மத்திய பிரதேசம் (ரூ.50 கோடி), ராஜஸ்தான் (50 கோடி), கா்நாடகம் (34 கோடி) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன என பிரதமா் அலுவலக அறிக்கை கூறுகிறது.

பி.எம்.கோ்ஸ் அறக்கட்டளை மாா்ச் 27 ஆம் தேதி உருவாக்க பட்டது. கரோனா தீநுண்மிக்கு எதிராகவும் மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் அரசு போராடுவதற்கு உதவ மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தவும், ‘பிரதமா் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தை(பி.எம்.கோ்ஸ்)’ பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இந்த அறக்கட்டளையில் மத்திய பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதி துறை அமைச்சா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...