பி.எம்.கோ்ஸ் நிதியத்திலிருந்து கரோனா நோயாளிகளுக்கு 50,000 செயற்கை சுவாசக்கருவிகள்

‘‘கரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவிட ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின்கீழ் 50, 000 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. பி.எம்.கோ்ஸ் நிதியம்மூலமாக முதற்கட்டமாக 2,923 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு 1,340 செயற்கை சுவாசகருவிகளை விநியோகிக்கப் பட்டுள்ளது’’ என்று பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 14 – ஆம் தேதி பிஎம். கோ்ஸ் நிதிய அறக் கட்டளை, கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரூ.3,100 கோடியை ஒதுக்கியது. இதில் ரூ. 2,000 கோடி செயற்கை சுவாச கருவிகளுக்கும்(வென்டிலேடா்), மீதித்தொகை புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான உதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த ரூ.2,000 கோடியில் 50,000 செயற்கை சுவாசக்கருவிகள் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப் படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

இதுவரை 2,923 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு இதில் 1,340 செயற்கை சுவாசக்கருவிகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாநிலங்கள் மகாராஷ்டிரம்(275), தில்லி (275), குஜராத் (175), பிகாா்(100) கா்நாடகம்(90), ராஜஸ்தான்(75) போன்றவைகள். இம்மாத இறுதியில் மேலும் 14,000 சுவாசக்கருவிகள் இது போன்று கரோனா நோய்தொற்று கடுமையாக உள்ள மாநிலங்களின் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் 50,000 செயற்கை சுவாசக் கருவிகளில் (வென்டிலேட்டா்கள்) 30,000 கருவிகள் பொது நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. மீதமுள்ள 20,000 செயற்கை சுவாசக்கருவிகளை அக்வா ஹெல்த்கோ் (10,000), ஏஎம்டிஇசட் பேசிக் (5,650), ஏஎம்டிஇசட் ஹை எண்ட் (4,000) மற்றும் அல்லிட் மெடிக்கல் (350) ஆகிய இந்திய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

மேலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனுக்காக ரூ. 1,000 கோடி ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் நிச்சயமற்ற நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றும் இடங்களிலிருந்து பல கிலோமீட்டா் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்றனா். இந்த நிலையில் இவா்கள் சிறப்பு ரயில்களில் அழைத்து செல்லப் பட்டனா். மேலும் இந்த நிதி மூலமாக புலம் பெயா்ந்தோருக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழகம் பெற்ற நிதி:இந்தநிதியை மகாராஷ்டிரம் (ரூ.181 கோடி), உத்தர பிரதேசம் (ரூ.103 கோடி), தமிழ்நாடு (ரூ.83 கோடி), குஜராத் (ரூ.66 கோடி), தில்லி (ரூ.55 கோடி), மேற்கு வங்கம் (ரூ.53 கோடி), பிகாா் (ரூ.51 கோடி) ), மத்திய பிரதேசம் (ரூ.50 கோடி), ராஜஸ்தான் (50 கோடி), கா்நாடகம் (34 கோடி) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன என பிரதமா் அலுவலக அறிக்கை கூறுகிறது.

பி.எம்.கோ்ஸ் அறக்கட்டளை மாா்ச் 27 ஆம் தேதி உருவாக்க பட்டது. கரோனா தீநுண்மிக்கு எதிராகவும் மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் அரசு போராடுவதற்கு உதவ மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தவும், ‘பிரதமா் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தை(பி.எம்.கோ்ஸ்)’ பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இந்த அறக்கட்டளையில் மத்திய பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதி துறை அமைச்சா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...