அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்

தமிழக அரசு மருத்துவ மனைகளில் கொரோனாவுக்கு தரமானசிகிச்சை அளிக்கப்படுவதால், அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். “ கொரோனா பரவல் ஏற்பட்டவுடன் மக்களுக்கு பயன் படக்கூடிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகளுக்கு ‘சன்மான்நிதி’ முன் கூட்டியே வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதேபோல வங்கிகளில் ‘ஜன்தன்’ வங்கி கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ஒருகோடி பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நவம்பர் மாதம்வரை ரேஷனில் ஐந்து கிலோ அரிசி, ஒருகிலோ பருப்பு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வோம். தமிழகத்தில் மின்கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவுக்கு அரசு மருத்துவ மனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முன்வர வேண்டும்.

கேரளாவில் நடந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் நியாயமாக விசாரணை நடத்தப்படவேண்டும். எனவே, கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...