வாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது

உலகிற்கு சிறப்பான எதிர் காலம் தேவைப் படுகிறது. அதற்கு நாம் ஒருங்கிணைந்து, வடிவம்கொடுக்க வேண்டும். நம் எண்ணம், சிந்தனை அனைத்தும், ஏழைகளின் நலன்களை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். தொழில்செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலகபொருளாதார நிலையை எதிர்கொள்ள, உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில், இந்தியா வெளிப்படை தன்மையை கடைப்பிடித்து வருகிறது.

இன்று உலகளவில் பரவியுள்ள தொற்றுநோய், நம் திறமைக்கு சவால் விடுத்துள்ளது. ஒரு விதத்தில், இந்த தொற்று, இந்தியாவுக்கு, சர்வதேசளவில் வாய்ப்புகளையும் தந்துள்ளது. வாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது. தற்சார்பு திட்டத்தின் மூலம், இந்தியா, உலகுக்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி தந்துள்ளது. ‘டிஜிட்டல்’ மயமாக்குதல், ஆரோக்கியமான போட்டியை உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவில், இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை, முதல் முறையாக, நகரங்களை விட கிராமங்களில் அதிகரித்துள்ளது. நாட்டில், விவசாயத்துறையில் முதலீடு செய்ய, அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சுகாதாரத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆண்டுக்கு, 22 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துவருகிறது. இத்துறையில் முதலீடு செய்ய, இந்தியா அழைப்பு விடுக்கிறது.

மருந்து உற்பத்தி துறையில், இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமான நட்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில், சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய, இதுவே சிறப்பான நேரம். இந்தியா, இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், இதில் முதலீடுசெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், விமான போக்குவரத்து துறையும் வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது.

இதிலும், முதலீடு செய்யலாம். ராணுவத்துறையிலும் முதலீடு செய்ய பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கொரோனா தொற்று காலத்திலும், ஏப்ரல் – மே மாதத்தில், இந்தியாவில் அன்னியமுதலீடு அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்றால், அது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளுக்கான வளர்ச்சியாக இருக்கும்.

சர்வதேச அளவில், முதலீடு செய்வதற்கு நம்பிக்கையுள்ள நாடாக, இந்தியா திகழ்கிறது. இங்கே முதலீடுசெய்ய, இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது என, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய வர்த்தக கவுன்சிலின், 45ம் ஆண்டு நிறைவையொட்டி, நடந்த அமெரிக்க – – இந்திய வர்த்தக கவுன்சில் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.