வாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது

உலகிற்கு சிறப்பான எதிர் காலம் தேவைப் படுகிறது. அதற்கு நாம் ஒருங்கிணைந்து, வடிவம்கொடுக்க வேண்டும். நம் எண்ணம், சிந்தனை அனைத்தும், ஏழைகளின் நலன்களை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். தொழில்செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலகபொருளாதார நிலையை எதிர்கொள்ள, உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில், இந்தியா வெளிப்படை தன்மையை கடைப்பிடித்து வருகிறது.

இன்று உலகளவில் பரவியுள்ள தொற்றுநோய், நம் திறமைக்கு சவால் விடுத்துள்ளது. ஒரு விதத்தில், இந்த தொற்று, இந்தியாவுக்கு, சர்வதேசளவில் வாய்ப்புகளையும் தந்துள்ளது. வாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது. தற்சார்பு திட்டத்தின் மூலம், இந்தியா, உலகுக்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி தந்துள்ளது. ‘டிஜிட்டல்’ மயமாக்குதல், ஆரோக்கியமான போட்டியை உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவில், இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை, முதல் முறையாக, நகரங்களை விட கிராமங்களில் அதிகரித்துள்ளது. நாட்டில், விவசாயத்துறையில் முதலீடு செய்ய, அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சுகாதாரத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆண்டுக்கு, 22 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துவருகிறது. இத்துறையில் முதலீடு செய்ய, இந்தியா அழைப்பு விடுக்கிறது.

மருந்து உற்பத்தி துறையில், இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமான நட்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில், சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய, இதுவே சிறப்பான நேரம். இந்தியா, இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், இதில் முதலீடுசெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், விமான போக்குவரத்து துறையும் வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது.

இதிலும், முதலீடு செய்யலாம். ராணுவத்துறையிலும் முதலீடு செய்ய பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கொரோனா தொற்று காலத்திலும், ஏப்ரல் – மே மாதத்தில், இந்தியாவில் அன்னியமுதலீடு அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்றால், அது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளுக்கான வளர்ச்சியாக இருக்கும்.

சர்வதேச அளவில், முதலீடு செய்வதற்கு நம்பிக்கையுள்ள நாடாக, இந்தியா திகழ்கிறது. இங்கே முதலீடுசெய்ய, இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது என, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய வர்த்தக கவுன்சிலின், 45ம் ஆண்டு நிறைவையொட்டி, நடந்த அமெரிக்க – – இந்திய வர்த்தக கவுன்சில் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...