அயோத்தியில் புதியமசூதி தேவையில்லை என உத்திரப் பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவர் வசீம்ரிஜ்வீ கூறியுள்ளார்.
ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான வசீம்ரிஜ்வீ நேற்று அயோத்தி வந்திருந்தார். கர்சேவக்புரம் சென்றவர் அங்குள்ள விஷ்வஇந்து பரிஷத்தினால் செய்து வைக்கப் பட்டுள்ள ராமர் கோயிலுக்கானக் கல்தூண்களை பார்வையிட்டார்.
பிறகு அங்கு தங்கியிள்ள ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராயுடன் சந்திப்பு நடத்தினார். பிறகு அயோத்தியின் முக்கிய மடங்களில் ஒன்றான திகம்பர் அகாடாவின் தலைவர் மஹந்த் சுரேஷ் தாஸுடனும் சந்தித்துபேசினார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வசீம் ரிஜ்வீ கூறுகையில், ‘அயோத்தியில் தொழுகை நடத்து பவர்கள் குறைவாக உள்ளனர். இதனால், இங்கு புதியமசூதி கட்டவேண்டிய தேவையில்லை.
அயோத்தி என்னுடைய தாய் வீடு போன்றது. இங்கு கட்டப்பட உள்ள ராமர் கோயில் எனது நீண்ட கால விருப்பம் ஆகும்.’ எனத் தெரிவித்தார்.
ஷியா முஸ்லிம்களின் தலைவர் ரிஜ்வீ டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்றவேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது .
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |