ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை

‘ராணுவத் துறையில் தற்சார்பு நிலையை எட்ட, அதிகளவில் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படுகிறது’ என, பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

ராணுவத் துறையில் தற்சார்பு என்றதலைப்பில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையிலான மாநாடு நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

நாம் பல ஆண்டுகளாகவே, ராணுவ ஆயுதங்களை இறக்குமதிசெய்யும் நாடாகவே இருந்து வந்துள்ளோம்.நாடு சுதந்திரம் அடைந்தபோதே, உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்கும்திறன் நம்மிடம் இருந்தது. ஆனால், இதில் கவனம் செலுத்தப்பட வில்லை.தற்போது, தற்சார்பு திட்டத்தின்கீழ், ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத்துறையில், அன்னிய நேரடி முதலீடு வரம்பும், 74 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம், நம் நாட்டைச்சேர்ந்த நிறுவனங்கள், ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் ஆயுதம் தயாரிப்பது, நம்முடைய தேவைக்காக மட்டுமல்ல. இந்ததற்சார்பு, உலக அமைதி மற்றும் உலக பொருளாதாரத்தை வலுப் படுத்தும். இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்  படுத்தும். தற்சார்பு நிலையை எட்டுவதற்காக, ராணுவத் துறையில் அதிகளவு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: ராணுத் துறையில் தற்சார்பு பெறுவதுடன், உலகின் ஏற்றுமதி நாடாகவும் நாம்விளங்க முடியும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யும், 101 வகையான ஆயுதங்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப் பட்டதும், அந்த நோக்கத்தில்தான்.’மேக் இன் இந்தியா’ என, இந்தியாவுக்காக உருவாக்குவதைவிட, உலக நாடுகளுக்காக உருவாக்கும் நாடாக, நாம் விரைவில் இருப்போம். இவ்வாறு, அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...