ரூ.20,050 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டம் தொடங்கப்பட்டது

மீன்வளத் துறைக்கு ஊக்கமளித்து, அடுத்த 4 ஆண்டுகளில் உற்பத்தியை இருமடங்கு உயர்த்த, ரூ.20,050 கோடி மதிப்பிலான பிரதமர் மீன்வளர்ப்பு மேம்பாட்டு திட்டத்தை, பிரதமர் மோடி இன்று (செப்., 10) துவங்கிவைத்தார்.

வீடியோ கான்ப்ரன்சிங் வாயிலாக, பீகார் மாநிலத்தின் மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் துவங்கிவைத்தார்.  கால்நடை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் இ-கோபாலா என்ற செயலியையும் அறிமுகப்படுத்தினார்.

அதன் பின்னர் கால்நடை மற்றும் மீன்வளதொழிலில் ஈடுபட்டுவரும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, ‘சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் 2025ம் ஆண்டுவரை ரூ.20,050 கோடி மீன்வளத் துறையில் முதலீடு செய்யப்படும். மீன்வளத் துறைக்காக இதுவரை செய்யப்பட்ட முதலீடுகளில் அதிகபட்சதொகை இதுவே’ எனக் குறிப்பிட்டார்.

‘2024 – 25ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 70 லட்சம்டன் கூடுதலாக்குவது; ஏற்றுமதி வருவாயை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்துவது; மீன்வளர்ப்பவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது; அறுவடைக்கு பிந்தையஇழப்புகளை 10 சதவீதமாகக் குறைப்பது; மீன்வளத் துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வது’ போன்றவற்றை பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் இலக்காக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...