அத்தியாவசியப் பொருட்கள் திருத்தமசோதா மக்களவையில் நிறைவேறியது

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்து வதற்கும், வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தமசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா-2020 திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம்செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்மூலம், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.

அரசின்அமைப்புகள் அதிகமான தலையீடுகளை உண்டாக்குமோ என்ற அச்சமின்றி தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் வேளாண் துறையில் அதிகமான முதலீடுகளை செய்யமுடியும் என்பதாகும்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்.பி. கவுசலேந்திர குமார் இந்தமசோதாவை ஆதரித்துப் பேசினார். அவர் பேசுகையில், ”இந்தமசோதா விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும். குறைந்தவிலையில் அவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. பிபி சவுத்ரி பேசுகையில், ”இந்தமசோதா விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோர்களுக்கும் பயனளிக்கும் மசோதா. வேளாண்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தொலை நோக்குடன் எடுக்கப்பட்ட முடிவு” எனத் தெரிவித்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி சஞ்சீவ் குமார் சிங்காரி, பிஜூ ஜனதா தளம் எம்.பி. பாரத்ரூஹரி மகதப் ஆகியோர் இந்தமசோதாவை ஆதரித்துப் பேசினர்.

இறுதியில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை ஆதரவில் நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...