இப்போது எனது புரிதல் மாறியுள்ளது

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் உடன் இருந்தார்.

இதையொட்டி பாஜகவின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் நடந்தநிகழ்வில் குஷ்பு மட்டுமின்றி முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன்ரவிச்சந்திரன் ஆகியோரும் கட்சியில் இணைந்தனர்.

மாற்றம் என்பது நிலையானது, இப்போது எனதுபுரிதல் மாறியுள்ளது என்று காங்கிரஸில் இருந்து பாஜகவில் சேர்ந்ததுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு தெரிவித்தார்.

பாஜக தமக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்றவேன். பிரதமர் நரேந்திரமோதி போன்ற ஒருதலைவர் தேவை எனும் புரிதலுக்கு நான் வந்துள்ளேன், இந்தியாவில் பலகோடி பேர், பிரதமர் நரேந்திர மோதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜகவில் உள்ள தொண்டர்களை போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

இழப்பில்லை என்கிறது காங்கிரஸ் ஒருகட்சி தமக்கான தலைமையையே கண்டுபிடிக்க முடியாத சூழலில் எப்படி நாட்டைக்காக்க முடியும் என்று காங்கிரஸை விமர்சித்தார் குஷ்பு.

காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பாஜகவை கடுமையாக விமர்சித்தது குறித்து பேசியவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அவ்வாறு விமர்சிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று குறிப்பிட்டார்.

ஒரு கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்தபோது கட்சியின் நிலைப்பாடு குறித்து, தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை மீறிபேச வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.