பீகாரில் பாஜக கூட்டணிக்கு 133-143 இடங்கள்கிடைக்கும் என்று சிஎஸ்டிஎஸ்- லோக் நிதி கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்ட சபை தொகுதிக்கு, 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் தேர்தலுக்கு முந்தைய சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சி கூட்டணியான ராஷ்டிரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 88-98 இடங்களில் வெல்லவாய்ப்பு உள்ளது.
பீகாரில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 122 இடங்கள் என்பதால், எதிர்க்கட்சி கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
ஐக்கிய ஜனதாதளம்-பாஜக ஆளும்கூட்டணிக்கு, 133-143 இடங்கள்வரை கிடைக்க வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து போட்டியிடும், எல்ஜேபி கட்சிக்கு 2 முதல் 6 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது இந்த கருத்துக்கணிப்பு.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |