குறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி

கோவிட்-19 தடுப்பூசியை குறைந்தவிலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய முக்கியபணியாக அமைந்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறினார்.

மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன் உலக வங்கி-சர்வதேச நிதியத்தின் ஆண்டுக்கூட்டத்தில் மெய்நிகர் வாயிலாக இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.

“கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் ஆரம்பசுகாதார விநியோக அமைப்பில் முதலீடு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், அனைவரின் ஒத்துழைப்புடன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்று கூறினார்.

“கோவிட் பரவல், இடையூறை அளித்துள்ள போதும், அதிலிருந்து நாம் மீண்டுவரவும், எதிர்காலத்திற்குத் தயாராவதற்கும் அது நமக்குக் கற்றுத்தந்துள்ளது”, என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தடுப்பு முயற்சியில் தனியார்துறையின் பங்கினை பாராட்டிய அமைச்சர், கோவிட் பரவலுக்கு எதிரான இந்தபோராட்டத்தில், தனியாரின் புதிய கண்டுபிடிப்புகள், திறமை ஆகியவையும் பெரும் உதவியாக இருந்துவருகிறது. பீபிஈ, என்95 முகக் கவசங்கள், பிராணவாயு, செயற்கை சுவாச கருவிகள், பரிசோதனைக் கருவிகள் போன்றவை அதிவிரைவில் தயாரிக்கபட்டு, போதுமான கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ உள்கட்டமைப்பு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து, கடந்த மார்ச்மாதம் ஒரு ஆய்வகத்திலிருந்து, இன்றைய தேதியில் 2000 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவை தனியார் துறையைச்சார்ந்தது. இதேபோல் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகள் மற்றும் தனிமைபடுத்தப்படும் மையங்களுக்கும் இது பொருந்தும்”, என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அசாதாரண சூழலால் உலகமே பல்வேறு சவால்களை சந்தித்துவரும் நிலையில், இந்தியா, கோவிட்டை கட்டுப்படுத்த, மெய்நிகர் தொடர்பான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆரோக்கியசேது செயலி, தொற்றுபரவ சாத்தியமுள்ள தொகுப்புகளை ட்ராக்கிங் மூலம் கண்டறியும் இதிஹாஸ் தொழில்நுட்பம், பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோய்தொற்றால் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குறித்த தகவல்களை அறியவும், கோவிட்சார்ந்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆர்டி-பிசிஆர் செயலி போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

அனைவருக்கும் சுகாதார சேவையைக் கொண்டுசேர்க்கும் வகையிலும், அசாதாரண சூழலை சமாளிக்கும் வகையிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியவர், “272 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சிறப்புபொருளாதார மற்றும் விரிவான தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் பொதுசுகாதாரம் மற்றும் சுகாதார சீர்திருத்தங்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பதுடன் எதிர் காலத்தில் இதுபோன்ற சூழலுக்கு இந்தியாவை தயார்படுத்தவும் முடியும்” என்று கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசியை குறைந்தவிலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் செய்வதே ஆராய்ச்சி யாளர்களின் தற்போதைய முக்கிய பணியாக அமைந்துள்ளது என்றும், தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து 3 இந்தியமருந்து நிறுவனங்கள், தடுப்பூசியின் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

One response to “குறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினருக்கு மிகப்பெரி ...

சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிற ...

ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்க ...

பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும்: மோகன் பகவத் பேச்சு நாட்டின்வளர்ச்சிக்கு பெண்கள்முக்கியமானவர்கள். அவர்களை பிற்போக்குத்தனமானபழக்கவழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடி ...

டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்க ...

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்., தடை: பிரதமர் மோடி பேச்சு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள ...

சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...