ஆயுஷ் ஆன்லைன் விநாடிவிநா

மத்திய அரசின் கல்வி அமைச்சகமானது 5-ஆவது ஆயுர்வேத தினத்தையொட்டி ஆன்லைனில் விநாடிவிநா போட்டியை நடத்துகின்றது. அகத்தியரின் பிறந்த நட்சத்திரம் சித்தமருத்துவ தினமாகக் கொண்டாடப் படுவதைப் போல தன்வந்திரியின் பிறந்த நட்சத்திரத்தை ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத தினமாகக் கொண்டாடுகின்றது. கடந்த 13 ம் தேதிதான் 5-ஆவது ஆயுர்வேததினம் நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிரதம மந்திரி அன்றைய தினம் (13.11.2020) ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனத்தையும் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதகல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

மாணவர்களிடையே ஆயுர்வேத மருத்துவமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஆயுர்வேத தினத்தை வாய்ப்பாகக் கருதி ஆன்லைன் விநாடிவிநா போட்டியை அறிவித்து 13.11.2020 ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றது.

”காற்றைத் தூய்மைப் படுத்துவதில் தாவரங்களின் பயன்பாடு & ஆயுர்வேதம் மூலம் கோவிட்-19 தொற்றைக் கையாளுதல் “ என்ற தலைப்பிலான இந்த ஆன்லைன் விநாடிவிநா போட்டியில் 5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்குப் பதில்அளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20 ஆகும். தவறானவிடைக்கு மதிப்பெண் கழித்து கொள்ளப்படமாட்டாது. ஏற்கனவே தொகுத்து வைக்கப்பட்டுள்ள கேள்வி வங்கியில் இருந்து கேள்விகள் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேட்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் உடனடியாகக் கல்விஅமைச்சகத்தின் மின் – ன்றிதழ் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு தகுதிச்சான்றிதழை என்சிஇஆர்டி நிறுவனம் வழங்கும். குறைந்த நேரத்தில் அதிகபட்ச சரியானவிடைகளை அளித்தவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தப்போட்டியில் 11 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒருமுறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் http://quiz.mygov.in என்ற இணைய முகவரிக்குச்சென்று போட்டிக்கான பக்கத்தைத் தேர்ந்தெடுத்து பெயர், முகவரி, மொபைல் எண், ஆதார் எண் மற்றும் இ-மெயில் ஆகியவற்றை உள்ளீடுசெய்துவிட்டு போட்டிக்கான கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கலாம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...