புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் பிஜேபி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிஜேபி யின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டதுடன் வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்து விளக்கி கூறி பேசினார்.

பின்னர் முருகன் செய்தியாளர்களை சந்தித்துகூறியதாவது, “புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதியதொழில்நுட்பம் இரட்டிப்பு மகசூல் போன்ற நன்மைகள் இந்தசட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால் பி.ஜே.பிக்கு விவசாயிகள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்த நல்லபெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திமுக போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. எல்லாமே அரசியலுக்காக செய்யப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

வரும் சட்டமன்றதேர்தலில் தற்போதுள்ள கூட்டணி தொடரும். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது? யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பிஜேபி யின் தேசியதலைமைதான் முடிவுசெய்யும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக நானும் அவரைசந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூடியவிரைவில் பி.ஜே.பியின் தேசியதலைமை முடிவு செய்து விரைவில் அறிவிக்கும்.

எனது தலைமையிலான வேல்யாத்திரையை தமிழக அரசு தடுத்தது என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால் வேல்யாத்திரை மூலம் எங்களுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. வேல்யாத்திரை மூலம் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நாங்கள் இதுவரை 20 மாவட்டங்களில் தேர்தல்பரப்புரையை முடித்து விட்டோம். விவசாயிகளை சந்தித்து 1,000 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். மத்திய அரசு நல்லது செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பதே கமல்ஹாசனின் எண்ணம்” என தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...