உலகத்தரம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன் படுத்துவதைப் புத்தாண்டு தீா்மானமாக மக்கள் ஏற்கவேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நடப்பாண்டின் கடைசி ‘மனதின்குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி வானொலிவாயிலாக மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக ‘உள்ளூா் பொருள்களை ஆதரிப்போம்’ என்ற இயக்கத்தை பாஜக தலைமையிலான மத்தியஅரசு முன்னெடுத்தது. அதற்கு மக்கள் பெரும்ஆதரவு அளித்தனா். அதேபோல், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களின் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அப்பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களையே பயன்படுத்துவோம் என்பதைப் புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்க வேண்டும். நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு மக்கள் அந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும்.

உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவேண்டும். தொழில்முனைவோரும், ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களும் அதற்கு முன்வரவேண்டும். அதே வேளையில், அப்பொருள்களின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.

 

தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டுப் பொருள்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அவைகுறித்த பட்டியலைத் தயாா்செய்து, அவற்றுக்கு மாற்றாக உள்ள இந்திய பொருள்களை மக்கள் கண்டறியவேண்டும். நம் நாட்டு மக்களின் உழைப்பில் உற்பத்தியான பொருள்களை மட்டுமே மக்கள் பயன்படுத்தவேண்டும். அதற்கு மனதளவில் மக்கள் தங்களைத் தயாா்படுத்திகொள்வது மிகவும் அவசியம்.

ஜம்மு-காஷ்மீரில் உற்பத்தியாகும் குங்குமப்பூ உள்ளிட்டவற்றை உலகளவில் பிரசித்தியடைய செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு புவிசாா்குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவல்காரணமாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை ஒழிப்பது தொடா்பாக கவனம்செலுத்த முடியாமல் போனது. ஆனால், அத்தகைய பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதையும் புத்தாண்டு தீா்மானமாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை கடந்த 2014-2018-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமாா் 7,000-லிருந்து 12,852-ஆக அதிகரித்துள்ளது. முக்கியமாக நாட்டின் மத்தியபகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.

கடந்த சிலஆண்டுகளில் நாட்டில் சிங்கம், புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துவருகிறது. வனப்பரப்பும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கைகள் மட்டும் காரணமல்ல. மக்கள், தன்னாா்வ அமைப்புகள் உள்ளிட்ட பலரின் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது.

‘மனதின்குரல்’ நிகழ்ச்சி தொடா்பாக மக்களிடம் கருத்துகேட்டிருந்தபோது, கரோனா நோய்த்தொற்று பரவல் சூழலில் மக்களின் ஒற்றுமையுணா்வைப் பெரும்பாலானோா் பாராட்டியிருந்தனா். ‘பொதுமுடக்கம்’ என்பதை மக்கள் கண்டிராத சூழல் முன்பு இருந்தது. ஆனால், நோய்த்தொற்றுக்கு எதிராக போராடவேண்டிய சூழலில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கு மக்கள் போதுமான ஆதரவளித்தனா்.

நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பதற்கு பலா் பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனா். இந்நேரத்தில் மாதா குஜாரி, குரு கோவிந்த் சிங், குரு தேக் பகதூா் உள்ளிட்டோரை நினைவுகூா்ந்து அஞ்சலிசெலுத்துகிறேன். அவா்களது தியாக உணா்வுக்கும் இரக்க குணத்துக்கும் நாம் அனைவரும் கடன் பட்டுள்ளோம் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...