வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரம்

”ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரியாக விளக்கும் வாரிசு அரசியல், ஒரு புதுவடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமெனில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பார்லிமென்டின் மைய மண்டபத்தில் நேற்று நடந்த, தேசிய இளைஞர் பார்லிமென்ட் திரு விழாவின் இரண்டாம் ஆண்டு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:குடும்பப் பெயரை பயன்படுத்தி, தேர்தலில் வெற்றிபெறும் நடைமுறை, கணிசமாக குறைய துவங்கி உள்ளது. அதேநேரம், வாரிசு அரசியல் முழுதுமாக ஒழியவில்லை.நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு, இந்த வாரிசு அரசியல் மிகப்பெரிய காரணமாக உள்ளது.

தங்கள் குடும்பத்தை சேர்ந்த முந்தைய தலைமுறையினர், தாங்கள்செய்த ஊழல்களுக்கு தண்டிக்கப்படாதது, புதிய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தைரியத்தை அளிக்கிறது.சொந்த குடும்பத்திலேயே பலஉதாரணங்கள் இருப்பதால், அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை. நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற தைரியத்துடன் உள்ளனர். தங்கள் குடும்பத்தையும், குடும்ப அரசியலையும் மட்டுமே பாதுகாக்க நினைக்கும் சுயநல அரசியல் தலைவர்கள் இன்றைக்கும் உள்ளனர்.

இவர்களால், நாட்டின் ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. வாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கிறது. அதன் திறமையின்மை, நாட்டுக்கு பெரும் சுமையாகிறது.நேர்மையானவர்களுக்கு, மக்கள் ஆட்சியில் இடம்அளிக்க துவங்கிவிட்டனர். எனவே, நாட்டின் நலனுக்காக, இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.மற்ற துறைகளைகளில் உள்ளதைபோல, இளைஞர்களின் புதிய சிந்தனை, கனவு, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை, அரசியலுக்கும் தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...