சசிகலா தமிழகம் திரும்பியபிறகுதான், அவருடைய நிலைப்பாடு தெரியும்

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்வேட்பாளர் என அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் முடிவை பாஜகவும் ஏற்கிறது என அக்கட்சி தலைவர் முருகன் தெரிவித்தார்.

சேலம்மாவட்டம் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் இளைஞர்அணி மாநாட்டு திடலை பார்வையிடும் நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் செவ்வாய்க் கிழமை (பிப். 2) சேலம்வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் முருகன் கூறியது:

“நாட்டின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில்கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இதில் தேர்தல்நோக்கம் எதுவும் இல்லை.

முத்ரா திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம், பயிர்க்காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களால் தமிழகம் தான் அதிகளவில் பயனடைந்துள்ளது.

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கின்றனர். நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜேபி.நட்டா மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது அமைக்கப்பட்ட இந்தக்கூட்டணி தொடர்கிறது. எங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப்பிடிக்கும்.

அதிமுக பெரியகட்சி. அக்கட்சித் தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்தமுடிவை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தின் மீது அக்கறை இருப்பதால் தான் பிரதமர் மோடி, மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு அறிவித்து வருகிறார். ராகுல்காந்தி வருகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளராது. இங்கே 3வது அணி அமையவும் வாய்ப்புஇல்லை.

சசிகலா தமிழகம் திரும்பியபிறகுதான், அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும். அதன்பிறகு அரசியல் சூழ்நிலை குறித்து பார்க்கலாம். அதிமுக – அமமுக இணைப்பிற்கு பாஜக முயற்சிக்கவில்லை.” இவ்வாறு பாஜக தலைவர் முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...