வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு

வேளாண்துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ்பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து, பாஜகவின் புதியதேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசியளவிலான நிர்வாகிகள் கூட்டம் முதல் முறையால டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக்கூட்டத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.

இந்தக்கூட்டத்தில் பாஜக தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில இணைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள்குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் கூறுகையில் ” பிரதமர் மோடி பேச்சின்போது, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், ஆத்மநிர்பார் திட்டம், வேளாண்சட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.” எனத் தெரிவித்தார்.

பாஜக துணைத்தலைவர் ராமன் சிங் பேசுகையில் ” அடுத்துவரும் அசாம், தமிழகம், கேரளா, மே.வங்கம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம். குறிப்பாக அசாமிலும், மே.வங்கத்திலும் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கரோனா காலத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள், தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு பாராட்டுத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தற்கு பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

வேளாண் சட்டங்களை பாஜக வரவேற்கிறது. இந்தபோராட்டம் அரசியல் ரீதியாக நடத்தப்படுகிறது. உண்மையான விவசாயிகள் வேளாண் சட்டங்களால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

பல்வேறு மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு வரவேற்பு இருக்கிறது எனகூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினையில் பிரதமர் மோடி அரசின் செயல்பாடும், கையாண்ட விதம் குறித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகள், புதிய வேளாண் சட்டங்களின் பலன்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார் ” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...