பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும்

மத்திய அரசுநடவடிக்கையால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், பாஜக இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் மாநிலமாநாடு, நடந்தது. இதற்காக, தமிழக சட்டப்பேரவை அலுவலக தோற்றத்தில், மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தமாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்;- அதிமுக, பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்டப்பேரவைக்குள் நுழையவேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜல் ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புதரப்பட்டுள்ளது.

நாட்டினை நிர்மாப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது. மத்திய அரசு நடவடிக்கையால் அடுத்தநிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்துகொண்டிருக்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.

சேலம் சென்னை விரைவுசாலை திட்டப்பணிகள் 2021-2022ல் தொடங்கப்படும். இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. கொரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கெட்டுவிட்டது.

வாஜ்பாய் தலைமையில் முதலில் ஆட்சி அமைத்தபோது ஆதரித்த ஜெயலலிதாவை ஒருபோதும் பா.ஜ.க. மறக்காது. உலகின் மிகப்பழமையான மொழியான, அனைத்து மொழிகளுக்கும் தாயாக உள்ள தமிழைநேசிக்கிறேன். தமிழ் முனிவர்கள் பிறந்தமண்ணை மிகவும் நேசிக்கிறேன். சேலத்தில் மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு போல மோடிஇட்லி பிரசித்திப் பெற்று வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்திச் செய்யப்படும்.

‘ நாட்டிற்கு அந்நியமுதலீடு அதிகளவில் வந்துக் கொண்டிருக்கிறது; பங்குச்சந்தையும் வேகமாக வளர்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. சேலம்- சென்னை விரைவு சாலைத் திட்டப்பணிகள் 2021- 2022 ல் தொடங்கப்படும். இந்திய அளவிலான இரண்டு ராணுவ தளவாடவழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். உடலில் உயிர் இருக்கும்வரை ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம். சீனாவுடன் ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு நமக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோத ...

மோடி அரசு பயங்கரவாதத்தை  ஒருபோதும் சகித்துக்கொள்ளாது – அமித்ஷா இந்தியாவில் அடுத்தாண்டுக்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் என்று மத்திய ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இ ...

ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்ததாலும் பிரச்சனை இல்லை – யோகி அதித்யநாத் ராமர் கோயிலுக்காக அதிகாரத்தை இழந்தாலும் பிரச்னையில்லை என்று உத்தரப் ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் ம ...

ஏப்ரல் 5-ல் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம் : முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பி ...

நாடகம் நடத்தும் திமுக ; மாநில பிரச்சனைகளை பேச வேண்டும் – அண்ணாமலை காட்டம் 'தொகுதி மறுசீரமைப்புக் கூட்டம் என்று தி.மு.க., நாடகம் நடத்துகிறது. ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேர ...

தி.மு.க விடை கொடுக்க வேண்டிய நேரம் – அண்ணாமலை ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – ...

ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனை – அமித்ஷா '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...