நரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை

பிரதமர் நரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை. அவருடைய இந்தப்பண்பை நான் பாராட்டுகிறேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.

ஜம்முகாஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட குலாம் நபி ஆசாத் இவ்வாறு பேசினார்.

முன்னதாக சனிக் கிழமையன்று ஜி-23 என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை குறித்து பல்வேறு கேள்விகளை அவர்கள் எழுப்பினர். இந்நிலையில், குலாம்நபி ஆசாத்தின் பேச்சு அதீத முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் பேசியதாவது:

“நம் தேசத்தின் தலைவர்கள் பலரிடம் பலநல்ல விஷயங்களை நான் கண்டு ரசித்திருக்கிறேன். சிலவற்றை பின்பற்றியிருக்கிறேன். நான் ஒருகிராமத்தைச் சேர்ந்தவர். அதில் எனக்கு எப்போதுமே பெருமை. அதேபோல், நமது பிரதமர் மோடி போன்றோரை நான் என்றைக்குமே பெருமையுடன் பார்க்கிறேன். ஒருகிராமத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர் பிரதமரானார். ஆனால் அவர் அதை என்றுமே மறைத்ததில்லை. நாங்கள் அரசியல் சித்தாந்த ரீதியாக எதிரிகளாக இருக்கலாம்.

ஆனால், அவரது சுயத்தை மறைக்காத பண்பை நான்வெகுவாக பாராட்டுகிறேன். ஆனால், சில அரசியல்வாதிகள் மாயையில் வாழ்கின்றனர். ஒருமனிதர் எபோதும் அவரது சுயத்தை சிலாகிக்க வேண்டும். நான் பலநாடுகளுக்கு பயனப் பட்டிருக்கிறேன். 5 நட்சத்திர, 7 நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால், என் சொந்த கிராமத்தில் என் மக்களுடன் நான் இருக்கும் போது தனித்துவமாக உணர்கிறேன்” எனப் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...