முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அவரதுமகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத விஷயங்கள், ஊழல் தொடர்பாக 8 பக்கஅறிக்கையைக் கையேடாக பாஜக தயாரித்துள்ளது. அதைமக்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் நாராயண சாமியைக் கடுமையாக பாஜக விமர்சித்துள்ளது. அத்துடன் அவரைத்தவிர வேறு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
முக்கியமாக ஊழல் விவகாரங்களைக் குறிப்பிட்டு பட்டியலிட்டுள்ளனர்.அதில் உள்ள முக்கிய விவரங்கள்:
“புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி அவரது மகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். எஸ்.சி. மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வேட்டி, சேலைதிட்டம், முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் மருத்துவமாணவர் சேர்க்கையில் முறைகேடு, மாஹே துறைமுக பணியில் நிதி முறைகேடு, கேபிள் டிவி வரிவருமானத்தில் முறைகேடு, மதுக்கடைகளை குத்தகைக்கு விட்டத்தில் முறைகேடு என ஊழல்பட்டியல் நீள்வதாக” குறிப்பிட்டுள்ளனர்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
3strengthening