உங்களுக்கு 50 நாள்தான் கெடு ஸ்டாலினுக்கு பாஜக அண்ணாமலை கெடு!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப் பேற்றதில் இருந்து, அவரது தலைமையில் பல்வேறு போராட்டங்களை பாஜக முன்னெடுத்துவருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதைபோன்று, மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்திவழங்க வேண்டும் என வலியுறுத்தி, அண்ணாமலை தலைமையில் சென்னை நுங்கம் பாக்கத்தில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேகதாது அணைவிவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக பாஜகசார்பில் தஞ்சாவூரில் (ஆகஸ்ட் 5) போராட்டம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை, நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடு ஆகியவை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு 50 நாட்கள் கெடுகொடுத்து அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய 1400 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கவேண்டும். 50 நாட்களில் நிறைவேற்றத் தவறினால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...