கரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும்

கரோனா வைரஸ் முதல்அலையை தடுத்தது போன்று, 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்றுமாலை முக்கிய ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு நாட்டுமக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல்கவனம் செலுத்தவேண்டும். அடுத்த 3 வாரங்கள் மிகமுக்கியமானது. இந்தகாலத்தில் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.

மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் அலையை விட தற்போது வைரஸ்பரவல் அதிகமாக உள்ளது. இது கவலை அளிக்கிறது.

எனினும் கரோனா முதல் அலையின்போது இருந்ததைவிட இப்போது போதிய உள்கட்டமைப்பு வசதியுடன் தயார்நிலையில் உள்ளோம். முதல் அலையின்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். தற்போது 2-வது அலைகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கருதுகிறேன்.பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடும் போதுமானதாக இல்லை.

கரோனா வைரஸ்பரவல் அதிகரிப்பது குறித்து அச்சப்படவேண்டாம். மாநில அரசுகள் பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லவேண்டும். குறிப்பாக 70 சதவீதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் பரி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது 72 மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் 30 பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முதல் கரோனா வைரஸ் அலையை தடுத்ததுபோன்று, சிறந்த நிர்வாகத்தின் மூலம் 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும்.

கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதிவரை கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நாட்களாக கடைபிடித்து, அதிகம் பேருக்கு தடுப்பூசிபோட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலைவரை ஊரடங்கை அமல் செய்யவேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...