கரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும்

கரோனா வைரஸ் முதல்அலையை தடுத்தது போன்று, 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்றுமாலை முக்கிய ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு நாட்டுமக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல்கவனம் செலுத்தவேண்டும். அடுத்த 3 வாரங்கள் மிகமுக்கியமானது. இந்தகாலத்தில் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.

மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் அலையை விட தற்போது வைரஸ்பரவல் அதிகமாக உள்ளது. இது கவலை அளிக்கிறது.

எனினும் கரோனா முதல் அலையின்போது இருந்ததைவிட இப்போது போதிய உள்கட்டமைப்பு வசதியுடன் தயார்நிலையில் உள்ளோம். முதல் அலையின்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். தற்போது 2-வது அலைகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கருதுகிறேன்.பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடும் போதுமானதாக இல்லை.

கரோனா வைரஸ்பரவல் அதிகரிப்பது குறித்து அச்சப்படவேண்டாம். மாநில அரசுகள் பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லவேண்டும். குறிப்பாக 70 சதவீதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் பரி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது 72 மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் 30 பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முதல் கரோனா வைரஸ் அலையை தடுத்ததுபோன்று, சிறந்த நிர்வாகத்தின் மூலம் 2-வது அலையையும் நம்மால் தடுக்கமுடியும்.

கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதிவரை கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நாட்களாக கடைபிடித்து, அதிகம் பேருக்கு தடுப்பூசிபோட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலைவரை ஊரடங்கை அமல் செய்யவேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.