மேற்கு வங்க வன்முறை: தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ்

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறையில் பெண்கள்தாக்குதலுக்கு உள்ளானது தொடா்பான குற்றச்சாட்டுகுறித்து மாநில டி.ஜி.பி. மே 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திரிணமூல்காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக அதிக இடங்களில்வென்று பிரதான எதிா்க்கட்சியாக உருவெடுத்தது.

தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக அலுவலகங்கள் சிலஇடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின. 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்கள் கொல்லப்பட்டனர் பல இடங்களில் பெண்களும் வன்முறையின் போது தாக்குதலுக்கு உள்ளானாா்கள். இதில் போலீஸாரும் பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தேசியமகளிா் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக் குழு அமைத்தது. அந்தக் குழுவினா் மேற்கு வங்கத்தில் நேரில்சென்று ஆய்வு நடத்தினா். அப்போது மாநில அரசும், காவல் துறையும் பெண்களை வன்முறையில் இருந்து காக்க உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆய்வுக் குழுவினா் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல்செய்ய உள்ள நிலையில், மாநில டி.ஜி.பி.க்கு தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மே 31-ம் தேதி ஆணையத்தின் முன்பு நேரில்ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை தொடா்பான விவரத்தையும் சமா்ப்பிக்க வேண்டும்; இதுதொடா்பாக காவல் துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...