மோடி சரத்பவார் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இந்தசந்திப்பு ஒருமணி நேரம் நீடித்ததாக பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தலில் தாம்போட்டியிட விரும்பவில்லை என்று சரத்பவார் கூறிய நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் புதிய அணியை உருவாக்க சரத்பவார் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக பிரசாந்த்கிஷோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக சரத்பவார் தலைமையில் வலுவானகூட்டணி அமைக்கப்படும் என்று பரவலாக பேச்சு எழுந்தது. மேலும் எதிர்க் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை களமிறக்க திட்டமிட்டதாகவும் கடந்த சிலநாட்களாகவே சரத்பவாரை மையமாக வைத்து பல்வேறு யூகச் செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

குஜராத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என்ற செய்திகள்வெளியாகின. அப்போதே குடியரசுத்தலைவர் தேர்தலில் சரத்பவாரை முன்னிறுத்த பாஜக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறதா என்கிற கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமித்ஷாவும், எதையும் வெளிப்படையாக கூற முடியாது என்று கூறி நழுவி விட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேட்டியளித்தார் சரத்பவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன் என்கிற தகவலில் உண்மையே இல்லை. 300 எம்.பி.க்களை கொண்டிருக்கும் ஒருகட்சிக்கு எதிராக போட்டியிட்டால் என்ன முடிவுகள் வரும் என எனக்கு நன்றாகவே தெரியும். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் நான் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாககூறினார்.

பிரசாந்த் கிஷோர் என்னை 2 முறை சந்தித்து பேசினார். அப்போது அவரது ஐபேக் நிறுவனம் தொடர்பாகமட்டுமே பேசினோம். 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தலைமை குறித்தோ குடியரசுத்தலைவர் தேர்தல்குறித்தோ நாங்கள் எதுவுமே பேசவே இல்லை. என்று தெரிவித்த அவர் தேர்தல் வியூகப்பணிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாகவே என்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் காலம்இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மாறக் கூடும். 2024 லோக்சபா தேர்தலுக்கான எந்தகூட்டணிக்கும் நான் தலைமை ஏற்கப் போவதும் இல்லை என்றும் சரத்பவார் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துபேசியுள்ளார் சரத்பவார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்துள்ளது. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடவிரும்பவில்லை என்று சரத்பவார் கூறிய நிலையில் நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து பேசப்பட்டது. சீன எல்லையில் தற்போதையநிலை குறித்து ராஜ்நாத்சிங் எடுத்துரைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...