மிகக்கடுமையான, சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் அவைகளில் மிகக்கடுமையான, சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தொடரில் கரோனாதடுப்பூசி தட்டுப்பாடு, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க் கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப் படுகிறது.

17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான இந்த மழைக்கால கூட்டத் தொடா் திங்கள் கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய் தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்.

கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்கவந்த பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் மழைபெய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே குடைபிடித்தபடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இருஅவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான மற்றும் சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள். ஆனால், அமைதியான முறையில் விவாதம் நடத்த அனுமதிக்கவேண்டும்,

மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும்.

நாட்டு மக்கள் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது, அனைத்துமுக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கவும் தயாராக உள்ளது. அதேவேளையில் மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...