மிகக்கடுமையான, சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளும் அவைகளில் மிகக்கடுமையான, சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தொடரில் கரோனாதடுப்பூசி தட்டுப்பாடு, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க் கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப் படுகிறது.

17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான இந்த மழைக்கால கூட்டத் தொடா் திங்கள் கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய் தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும்.

கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்கவந்த பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் மழைபெய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே குடைபிடித்தபடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இருஅவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான மற்றும் சிந்திக்கும் வகையிலான கேள்விகளை எழுப்புங்கள். ஆனால், அமைதியான முறையில் விவாதம் நடத்த அனுமதிக்கவேண்டும்,

மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும்.

நாட்டு மக்கள் சார்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது, அனைத்துமுக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கவும் தயாராக உள்ளது. அதேவேளையில் மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...