உங்கள் கனவு… அது எங்கள் கனவு

பாரலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திர ங்களுடன் பிரதமர் மோடி உற்சாகமாக கலந்துரையாடினார்.

ஒவ்வொருவருக்கும் இந்தநாள் மறக்க முடியாததாக அமைந்தது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிநடந்தது. இதில் அசத்திய இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட 19 பதக்கங்கள் வென்றது. பதக்கம் கைப்பற்றிய தமிழக உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் (வெள்ளி), ஈட்டி எறிதல்வீரர் ஜஜாரியா (வெள்ளி) உள்ளிட்ட நமது நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி, தனது வீட்டில் சமீபத்தில் விருந்துகொடுத்து கவுரவித்தார். அப்போது ஒவ்வொருவரும் பாராலிம்பிக் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதன்சிறப்பு ‘வீடியோவை’ நேற்று ‘டுவிட்டரில்’ பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதில் இடம்பெற்ற சில சுவாரஸ்யங்கள். பாட்மின்டனில் தங்கம்வென்ற கிருஷ்ணா நாகர், தனது பதக்கத்தை கொரோனா முன்கள பணியாளர்களுக்கு அர்ப்பணித்திருந்தார். இதனை கேள்விப்பட்ட மோடி,”உங்கள்செயல் மனதை தொட்டது. அந்த தருணம் எப்படி இருந்தது,” என கேட்டார்

இதற்கு கிருஷ்ணா,”சுகாதார பணியாளர்கள் தங்கள் உடல்நலனை பற்றி கவலைப்படாமல் நாட்டுமக்களுக்காக சேவை செய்தனர். இந்தசெயல்தான் பதக்கத்தை அவர்களுக்காக அர்ப்பணிக்க துாண்டியது,”என்றார்.

ஈட்டி எறிதலில் வெள்ளிவென்ற ஜஜாரியா கூறுகையில், ”2004ல் ஏதென்சில் நடந்த பாராலிம்பிக்கில் தங்கம்வென்றேன். அப்போது ஏதென்ஸ் பயணசெலவுக்காக எனது அம்மா நகைகளைவிற்று உதவினார். பதக்கம்வென்ற பின் வாழ்க்கையே மாறிவிட்டது,” என்றார்.

பிரதமர் மோடியிடம் துப்பாக்கிசுடுதலில் தங்கம், வெண்கலம் வென்ற அவனிலேகரா கூறுகையில், ”டோக்கியோ போட்டிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சியில், ‘முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்படுங்கள். நெருக்கடிக்கு ஆளாகாதீர்,’ என நீங்கள் ஆலோசனை வழங்கினீர்கள். இதனை பின்பற்றியதால் இருபதக்கங்கள் கிடைத்தன,” என்றார்.

டேபிள் டென்னிசில் வெள்ளிவென்ற பவினா கூறுகையில்,”வைரஸ் காய்ச்சலால் துவக்க போட்டிகளில் சிரமப்பட்டேன். அப்போது டோக்கியோ வழியனுப்பும் நிகழ்ச்சியில் நீங்கள்சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தேன். எனது கடைசி ஒலிம்பிக் வாய்ப்பாக இருக்குமோ என பயந்தேன். இறுதியில் பதக்கம்வென்றேன்,”என்றார்.

இதற்கு பதில் அளித்த மோடி, ”எப்போதும் எதிர்மறையாக சிந்திக்காதீர். உங்களால் பலம்வாய்ந்த போட்டியாளரைகூட வெல்ல முடியும்,”என்றார்.

பிரதமர் மோடி பேசியது: உங்களிடம் இருந்து உத்வேகம், ஊக்கம்பெறுகிறேன். தோல்வி மனப்பான்மையை தோற்கடித்துள்ளீர்கள். அதுவே பெரியசாதனைதான். நீங்கள் செய்யும் சிறிய விஷயம் கூட நாட்டு மக்களுக்கு ஊக்கம்அளிக்கும். உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு ஊக்கம்தரலாம்.விளையாட்டை தவிர வேறு வழிகளிலும் நாட்டுக்காக ஏதாவது செய்யலாம். நல்லமாற்றத்தை விதைக்கலாம். நீங்கள் நாட்டுக்காக செய்யவேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.

உங்களால் இந்தியமண்ணில் விளையாட்டு கலாசாரம் வளர்ச்சிஅடையும். நீங்கள் அனைவரும் நாட்டின் துாதர்கள். உங்களது சிறப்பான செயல்பாட்டின் மூலம் உலக அரங்கில் நாட்டின் கவுரவத்தை உயர்த்தி யுள்ளீர்கள். கடின உழைப்பு காரணமாக, அனைவரும் அறியும்

நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளீர்கள். உண்மையான விளையாட்டுவீரன் வெற்றி, தோல்வியை கண்டு சோர்வடையமாட்டான். தனது பயணத்தில் முன்னேறி செல்வான்.நீங்களும் வாழ்க்கையில் பலதடைகளை சமாளித்து சாதித்துள்ளீர்கள்.

உங்கள் மனஉறுதியை பாராட்டுகிறேன். உங்களது எதிர் காலம் பிரகாசமாக உள்ளது.உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன். உங்கள்கனவு… அது எங்கள் கனவு.அதை நனவாக்க அனைத்து உதவிகளையும் செய்வேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...