பாஜக நிர்வாகி காலில் விழுந்த பிரதமர் மோடி

நாட்டிலேயே பெரியமாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்டதேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.

அடுத்த வரும் ஜன. 23இல் அடுத்தகட்ட வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்தத்தேர்தலில் மத்திய உபி-இல் உள்ள 9 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக தீவிரமுயற்சி எடுத்து வருகிறது. அங்கு தற்போது பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நேரடியாகப் போட்டி நிலவுகிறது. அங்குப் பல ஆண்டுகளாகவே எந்தவொரு கட்சியும் ஆட்சியை தக்கவைத்தது இல்லை. இதனால் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் பல்வேறு தலைவர்களும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பிரதமர் நரேந்திரமோடி நேற்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்தார். அப்போது உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாஜகவின் உ.பி. மாநிலதலைவர் சுதந்திர தேவ்சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் ராமர் சிலையைப் பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். அதன்பின்னர் உன்னாவ் மாவட்ட தலைவர் பாஜக அவதேஷ் கட்டியார் பிரதமரின் பாதங்களைத்தொட்டு வணங்கினார்.

அவரை தடுத்த பிரதமர் மோடி, யாரும் யார்காலிலும் விழக்கூடாது என்று விளக்கினார். மேலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் மேடையிலேயே பிரதமர் மோடி, அவதேஷ் கட்டியார் காலில்விழுந்தார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் காலில் தொண்டர்கள் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் விழுந்துவணங்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது தவறான செயல் என்பதை விளக்கும்வகையில் பிரதமர் செய்த இச்செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

அவதேஷ் கட்டியார் கடந்த ஆண்டு செப்டம்பரில் பாஜகவால் உன்னாவ்மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அதற்குமுன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொது செயலாளராக இருந்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...