பொள்ளாச்சியில் பொங்கியவர்கள் இப்போது அடங்கி போவது ஏன்?

விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதே போல பல்லடம் அருகே 3வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுக பிரமுகரான கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது செய்ப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது தலித் பெண்ணை இரண்டு திமுக நிர்வாகிகள், நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அது வீடியோ படம் எடுத்து, பல மாதங்களாக அப்பெண்ணை மிரட்டி செய்த வன்கொடுமை நெஞ்சை பதற வைக்கிறது.

வடமாநிலங்களின், ஒரு சில படிப்பறிவில்லாத மக்கள் வாழும், கிராமப் பகுதியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், தற்போது தமிழ்நாட்டில் பரவலாக அடுத்தடுத்த நிகழ்ந்து கொண்டிருப்பது, அதிலும் ஆளும் திமுக கட்சிப் பிரமுகர்கள் சம்மந்தப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடுமையை நினைவு படுத்தும் வகையில் அதே பாணியில் இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அப்போது பொங்கி எழுந்த சமூக சேவகர்களும், ஒரு தலைப்பட்சமான விமர்சனங்களும், இப்போது சத்தமில்லாது அடங்கிப் போவதன் மர்மம் என்ன?.

இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த வெட்கக்கேடான செயலில் முதலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு உள்ளூர் திமுக பிரமுகர்கள் இருவர் என்பதே.

தமிழகத்தில் கௌரவம் கருதி இது போன்ற குற்றச்செயல்கள் பொது வெளிக்கு வராமல் குடும்பத்தினரால் மறைக்கப்பட்டும் பெண்களுக்கு எதிரான அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

இந்தக் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தருவது அவசியமே, ஆனால், அதற்கு இணையான அவசியமும் அவசரமுமான பணி, தற்போது திமுக ஆட்சியில், ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, தமிழக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். குற்றவாளிகளுக்கு அச்சத்தைக் கொடுக்கும்.

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள், காவல் துறைக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தை செலுத்தும், தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை விடுவிப்பாரா?, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?.

நன்றி அண்ணாமலை

பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...