எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பாக்ஸ்கான்; மோடியுடன் சந்திப்பு

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம்முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் உற்பத்தியில் பல சிக்கல்கள் இருப்பதுமட்டும் அல்லாமல் போதிய கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாமல் இருப்பதால் வர்த்தகப் பாதிப்பு சற்றுஅதிகமாகவே இருக்கிறது.

இந்த இடைவேளையை உணர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் எலக்ட்ரிக்கார் தயாரிப்பில் இறங்குவது மட்டும் அல்லாமல், இந்தியாவில் தொழிற் சாலையை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இதற்காக இன்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் பிரதமர் மோடியை நேரில்சந்தித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி வியாழன் அன்று பாக்ஸ்கான் தலைவர் யங் லியு-வை சந்தித்து, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவு படுத்தும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் திட்டங்களை வரவேற்பதாக தெரிவித்தார் மோடி தெரிவித்தார்.

“Foxconn இன் தலைவரான திரு யங்லியுவை சந்திப்பதில் மகிழ்ச்சி. செமிகண்டக்டர்கள் உட்பட இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவு படுத்துவதற்கான அவர்களின் திட்டங்களை நான் வரவேற்கிறேன்” என்று மோடி தனது டிவிட்டரிலும் கூறினார்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திட்டம் மூலம் இந்தியாவின் நெட்ஜீரோ இலக்கை அடைய முடியும் என பிரதமர் நரேந்திரமோடி உடனான சந்திப்பில் பாக்ஸ்கான் தலைவர் யங்லியு கூறியுள்ளார்.

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிக்க பல தொழிற் சாலைகளை வைத்துள்ள நிலையில் தற்போது எலக்ட்ரிக்கார் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

பாக்ஸ்கான் ஜூன் 15ஆம் தேதி தனது முதல்பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையைத் தைவான் நாட்டின் Kaohsiung பகுதியில் துவங்கியது. வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா தொடர்ந்து இந்தியாவிலும் எலக்ட்ரி வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனம் சொந்தமாக பேட்டரி தொழிற் சாலையைத் துவங்கியது நம்பிக்கை அளிக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...