ஏன் இவ்ளோ கோபமும் வெறியும் சித்ரா சேச்சி மீது… ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரதிஷ்டை தினத்தில் ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என சொன்னதில் என்ன தவறுஇருக்கிறது.
சித்ரா சேச்சிக்கு அவரோட கருத்தைசொல்ல இந்த தேசத்தில் உரிமை இல்லையா ..
சித்ரா சேச்சி மனதில் இறுகப்பிடித்த சனாதனதர்மத்து ஸ்ரீராமனை தீபம் ஏற்றி வரவேற்கணும் என்று தானே சொன்னார்கள்.
சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய துயரத்தை சந்தித்தவர் சித்ரா சேச்சி…மீளாத்துயரம் என்றால் அவ்ளோ பெரிய மீளாத்துயரம்..யாருக்கும் இந்தநிலமை வரவே கூடாது…
ஆனால் அவ்ளோ பெரிய மீளாத்துயரத்திலிருந்து ….மீண்டு வந்து இன்றும் நம்மை பாடல்கள்பாடி மகிழ்விக்கிறார் என்றால்…அது சனாதன தர்மம்கொடுத்த தைரியம்…அவர்களது இறைபக்தி…எல்லாம் இறைவன்செயல் என்று தன்னைத்தானே தானே திடப்படுத்தியது …அதான் இன்றும் நம்முன்னால் சித்ரா சேச்சியால் நிற்க முடிகிறது…
ஸ்ரீராம மந்திரத்தின் மஹிமை சிம்பிள்…ரத்னாகரன் என்ற காட்டாளனை ; வழிப்பறி திருடனை வால்மீகு மஹிரிஷி ஆக்கியது ஸ்ரீராம மந்திரம் என்றால்…ஆயுள் முழுவதும் ஸ்ரீராம மந்திரம் ஜெபிப்போம்…
ஜனவரி 22ஆம் தேதி நானும் தீபம் ஏற்றுவேன்…ஹிந்துக்கள் தீபம் ஏற்றத்தான் போகிறார்கள்…வீடுகளும் வீதிகளும் ஸ்ரீராம மந்திரத்தாலும் தீபத்தாலும் நிரம்பத்தான் போகிறது …
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |