பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம் – அண்ணாமலை எதிர்ப்பு

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில், முதல்வர் ஸ்டாலின், நாடு முழுதும் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ‘ரூ ‘ என குறிப்பிட்டு உள்ளார். இந்த மாற்றத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ரூபாய் என்பதை குறிப்பிட நாடு முழுவதும் தேவநாகிரி எழுத்துரு, கடந்த 2010ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசும், இந்த குறியீட்டை பயன்படுத்தி வந்தது.

தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் 2025- 2026ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் லச்சினயை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில், ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப்படுத்தி லச்சினை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்திய அரசின் 14 அலுவல் மொழிகளில் ஒன்றை தான் முதல்வர் பயன்படுத்தி உள்ளார். இது தாய்மொழி மீதான பற்றை வெளிப்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரானது இல்லை எனக்கூறப்பட்டு இருந்தது. இந்த மாற்றம் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025 -26 ம் ஆண்டுக்கான தி.மு.க., அரசின் பட்ஜெட்டில், தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டு உள்ளது. இந்த குறியீடு, பாரதம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நமது நாணயத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் ஆவார். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய – மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில், அடுத்ததாக இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கிய உதயகுமார், தந்தையும் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தர்மலிங்கம், தாயார் ஜெயலட்சுமி, மூத்த சகோதரர் ராஜ்குமார், இளையசகோதரர் விஜயகுமார் ஆகியோருடன் சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடந்த 2010 ஜூலை 24 அன்று சந்தித்தார்.

இந்த புகைப்படத்தை ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: ரூபாய்க்கான குறியீடு தேவநாகிரி முறையில் இருப்பதால் தான் அதனை நீக்கி உள்ளதாக, தமிழக மாநில திட்டக்குழு நிர்வாக துணைத்தலைவர் கூறியுள்ளார். இவரை போன்ற நபர்கள் முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்திருக்கின்றனர்.

திறமையற்றதை மறைக்க வெற்று விளம்பரங்களுடன், அர்த்தமற்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தந்தை அங்கீகரித்ததை மகன் புறக்கணிக்கிறார். இவ்வாறு அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்� ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி� ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மா� ...

பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம் – அண்ணாமலை எதிர்ப்பு நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட ...

பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆப� ...

பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை – நிர்மலா சீதாராமன் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ...

உ.பி -யில் நடப்பட்டுள்ள 210 கோடி மர ...

உ.பி -யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள் – முதல்வர் யோகி ஆதித்யநாத் நாத் பெருமிதம் கடந்த 8 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 210 கோடி ...

வெற்றிலைரமாக பிரிக்கப்பட்ட ஸ்� ...

வெற்றிலைரமாக பிரிக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் – இஸ்ரோ 'ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் விண்ணில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...