மதமாற்றம் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரி !

 மதமாற்றம் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரி !அப்பா: என்ன ரமேஷ்,நம்ம தெருவில டமாரச்சத்தம்? சோப்பு விளம்பரமா?

ரமேஷ்:எதிர்வீட்டு எட்வர்டு அங்கிள் வீட்டு மொட்டைமாடியில் ஷாமியானா போட்டு அல்லேலுயாக்காரங்க கோஷம் போட்டு கொட்டடிக்கிறங்கப்பா!

அப்பா:சரிதான்,அவங்க மதச்சடங்கு போலிருக்கு.நடக்கட்டும்.

ரமேஷ்:"சாத்தானை மிதிப்போம்; தேசத்தை சுத்திகரிப்போம்"னு பாடறாங்களே,எதை சாத்தான்னு சொல்லுறாங்க? இஸ்லாத்தையா? இந்துயிசத்தையா?

அக்கா: ரமேஷ்,நான் சொல்லுறேன்.சாத்தான் அப்படீனா இஸ்லாத்தை நம்ம நாட்டில சொல்றதை கிறிஸ்தவங்க தவிர்ப்பாங்க.அது அவங்களோட யுத்த தந்திரம்.நம்ம இந்துயிசத்தை பேர் சொல்லாம இழிவு படுத்துறதுல இவங்க எக்ஸ்பர்ட்.தெரிஞ்சுக்கோ.

அம்மா:அதென்னமோ நம்ம ஸ்லோகம் சொல்லித்தர்ற மாமி வீட்டுக்குள்ள வந்து அவங்க கணவர் உடல் தேற பிரார்த்தனை செய்கிறோம்னு வந்து போறாங்களே?

ரமேஷ்:உங்க சாமி காப்பாத்தாது.ஏசு சாமிதான் காப்பாத்தும்னு சொல்லி கவலையோடு உள்ளவங்க கழுத்துல சிலுவை மாலை போட்டு சர்ச்சுக்கு ஆள் சேர்க்கிற வேலையம்மா அது.வெறும் மூளைச்சலவை.

அண்ணன்:சர்வதேச அளவுல போடப்பட்ட திட்டம் இது. 'ஜனானா ஊழியம்'னு பேரு.ஆம்பிளைங்க வீட்ல இல்லாத நேரம் பார்த்து வீட்டுப் பெண்களை குழப்பி மதமாத்துறாங்க.

ரமேஷ்:(வீட்டுக்குள் ஓடி வந்து)அண்ணா,அண்ணா,எட்வர்டு வீட்டை ஜெபவீடா மாத்தப் போறதா மைக்கில சொல்றாங்க.

அப்பா:அதெப்படி? நம்ம தெருப் பேரே பிள்ளையார் கோயில் தெரு.அப்படி இருக்க சர்செல்லாம் வந்திச்சின்னா சங்கடம் தான்.

அம்மா:ஆமாம்,ஆமாம்,எந்தத் தெருவில யார் இறந்து போனாலும் சவம் எடுக்கற வரைக்கும் கோவில் நடை சாத்தி வப்போம்;ஆனால் பக்கத்துத் தெரு சர்ச்ல தைப்பொங்கல் அன்னிக்கி எங்கிருந்தோ ஒரு சவத்தைக் கொண்டு வந்து வச்சு பிரேயர் செஞ்சாங்க.சர்ச்னா நம்ம கோயில் மாதிரி இல்லிங்க.அங்க நாள்,கிழமை ஒண்ணும் கிடையாது.

அப்பா: ஓகோ,அதனாலதான் கன்யாகுமரி ஜில்லாவுல ஒரு ஊர்ல ஒருத்தர் குடியிருக்கும் வீட்டை சர்ச்சாக்கப் பாத்தபோது அது கேஸாகி அப்படி செய்யக் கூடாதுன்னு தடுத்து கோர்ட் தீர்ப்பு சொல்லியிருக்கு போல இருக்கு.நாம் உஷாராயிடணும்.எட்வர்டைக் கூப்பிட்டு பேசிப்பார்ப்போம்;சரிப்பட்டு வரலேனா இருக்கவே இருக்கு அந்த கோர்ட் தீர்ப்பு.

பெரியப்பா,பெரியம்மா: என்ன இன்னிக்கு இங்க கோர்ட், கேஸ் ,தீர்ப்புன்னு அமளிதுமளிப்படுது?

ரமேஷ்:(வந்த பெரியவர்களை வணங்கி) நீங்களே சொல்லுங்க பெரியப்பா,என் சிநேகதன் ஒருத்தன் அவங்க அம்மாதான் உசத்தின்னு சொல்றதுக்காக எங்க அம்மா மட்டம்னு பேசறான்.அநியாயமில்லையா?

பெரியப்பா: அக்கிரமம்.உன்னை அடிதடிக்கு தூண்டுறான் அப்டீன்னுதான் ஆகுது.

ரமேஷ்: அப்படிச் சொல்லுங்க பெரியப்பா,ஹிந்து மதம் மட்டம்;எங்க மதம் தான் ஒரே வழி; அப்டீன்னு பேசறவங்களும் அப்படித்தானே?

பெரியம்மா:அப்படித்தான்.இது சுவாமி தயானந்த சரஸ்வதி போல உள்ளவங்க எல்லாம் சொல்ற உதாரணம் தானே?

அக்கா:ஆமாம் பெரியம்மா,.கண் மண் தெரியாம மதமாற்றக் கூட்டங்கள் சுற்றிகிட்டுத் திரியுது.பாருங்க எதிர்வீட்ட!

பெரியப்பா:எப்பவும் கிறிஸ்தவ மிஷனரிகள் அப்படித்தான்.என் சர்வீஸில் நான் பாத்திருக்கேன்.1928இல் திருவாங்கூர் மகாராஜா எல்லா ஹிந்துக்களையும்(ஹரிஜன் உள்பட) ஆலயப்பிரவேசம் செய்யலாம்னு சட்டம் போட்டார்.இதனால மதமாற்ற வேலைக்கு ஆபத்துன்னு பாதிரிகள் வெள்ளைக்கார அரசாங்கத்தை எச்சரிக்க இங்கிலாந்துக்கே போனாங்க.

அப்பா: 1961இல் கோவாவை பாரத ராணுவம் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து விடுவிக்கிறதுக்கு முன்னாடி கோவா பிஷப்பை அடக்கி வைத்து உத்தரவிடும்படி சொல்ல நேரு அரசு,போப்பிடம் மண்டியிடாத குறையாக கெஞ்சியது சந்தி சிரித்ததே?

அண்ணா: கல்லூரிப் பேராசிரியராக இருந்த டாக்டர் என்.ராதாகிருஷ்ணன். . .

அக்கா: யாரு? ஜனாதிபதி ஆனாரே?

அண்ணா: ஆமாம் அவர்தான். அவர் எழுதிய வேதாந்தக் கருத்துக்கள் அடங்கிய தத்துவ இயல் புத்தகங்கள் பாடநூலாவதைத் தடுத்து மறித்துக்கொண்டிருந்தது கிறிஸ்தவ ஆதிக்கம் உள்ள கல்வித்துறை.அழுதே விட்டார் ராதாக்ருஷ்ணன்.

ரமேஷ்: அது சரி,சுதந்திர பாரத அரசாங்கம் இந்துக்களை மதமாற்றச் சதியிலிருந்து காப்பாத்த எதுவுமே செய்யலியா?

பெரியப்பா: 1950 களில் நியோகி கமிஷன் வந்தது;மதமாற்றத்தடைச் சட்டம் போடச் சொல்லி சிபாரிசு செஞ்சது.ஆனா பார்லிமெண்டில் ஒரு எம்.பி. மதமாற்றத் தடைச்சட்ட தனி நபர் மசோதாவைக்கொண்டு வந்தார்.உடனே,மதர் தெரஸா நமது சுதேசிப் பிரதமர் மொரார்ஜி தேசாயை சந்தித்தார்.மசோதா சட்டமானால் அதை எதிர்த்து நான் இந்திய நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன் என்று மிரட்டிப் பணிய வைத்தார்னா பார்த்துக்கோயேன்?

அண்ணா: எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்துல கூட வேணுகோபால் கமிஷன் வந்ததே? மதமாற்றம் தான் (கன்னியாக்குமரி மாவட்டத்துல மண்டைக்காடு)கலவரத்துக்குக் காரணம்;அதனால மதமாற்றங்களைத் தடை செய்யணும்னு அவர் பரிந்துரை செஞ்சாரே?

ரமேஷ்: அப்ப,போன ஆட்சிக் காலத்துல ஜெயலலிதா மேடம் மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்து. . .

அப்பா: அதைத் தான் வாபஸ் வாங்கிட்டாங்களே?

ரமேஷ்: அப்டீனா மதமாற்ற விஷயத்துல அரசாங்கத்தை நம்பி பிரயோஜனமில்லை. . .

அண்ணா: படிச்சவங்க,விவரம் தெரிஞ்சவங்க தான் மத்தவங்களுக்கு விஷயங்கள எடுத்துச் சொல்லிப் புரியவைக்கணும்.

அக்கா: என்னனு?

அண்ணா:மதத்தப் பிரச்சாரம் செய்யற உரிமைய கையில வச்சுக்கிட்டு,பணம் கொடுத்து,மிரட்டி,கடன் கொடுத்து,மோசடி பண்ணி மதமாத்துறது சமூக நல்லிணக்கத்தை அழிச்சுடும்.அழிச்சுக்கிட்டு இருக்குது.ஊர்ல எல்லோரும் ஒண்ணா இருக்குறது நல்லதா,மதத்தைக் காட்டி வெறுப்பத் தூண்டி சண்டை சச்சரவுல எறங்குறது நல்லதான்னு எல்லாரையும் யோசிக்க வைக்கணும்.

ரமேஷ்:எப்படி?

அண்ணா:வீடு வீடா ஏறி இறங்கணும்.காந்திஜி,அம்பேத்கர் மாதிரி பெரியவங்கல்லாம் மதமாற்றம் பத்தி பேசியிருக்கறத வீடு வீடாப் போய் எடுத்துச் சொல்லணும்.

மற்ற அனைவரும்:அது சரிதான்.அப்படியே செய்வோம்!

நன்றி:விஜயபாரதம் 

நன்றி வீரமுனி ஸ்ரீவிலிபுத்தூர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...