ஐஏஎஸ்., அதிகாரி உமாசங்கரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாகர்கோவில் அருகே_நடந்த சாலை மறியலில், பாரதிய ஜனதா மாநில தலைவர், பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் நாடு ஒழுங்கு_நடவடிக்கை கமிஷனராக இருக்கும் உமா சங்கர், நாகர்கோவில் மேற்கு பரசேரியில், இந்திரா ஆதி திராவிடர் காலனியில் நடைபெற்ற “கன்வென்ஷன்’ நிகழ்ச்சியில், அரசு வாகனத்தில் சென்று கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு, காவல் துறையினர் தடை விதித்திருந்த போதும் , உமாசங்கர் கலந்துகொண்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது .
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா சார்பில் புகார் தரப்பட்டது; ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைகண்டித்து, பாரதிய ஜனதா சார்பில் பரசேரி சந்திப்பில்_மறியல் நடந்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மறியலில் பங்கேற்றனர். பிறகு மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.