பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து விரிவாக விசாரணையை நடத்த அமைக்கப்படுகிறது , குறிப்பாக நாட்டில் உருவாகும் மிகப்பெரிய ஊழல் மற்றும்

முறைகேடுகள், இந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்கள்மத்தியில் பெரும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தினால் ஜே.பி.சி அமைக்கப்படுவது பார்லிமென்ட்-நடைமுறையில் வழக்கமானதாக இருந்து வந்துள்ளத,

பார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்.பி.க்களை கொண்டு அமைக்கப்படுவது பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆகும் . பார்லிமென்ட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில் , விகிதாசாரத்தின்படி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் எம்.பி.,க்கள் இடம்பெறுவர். லோக்சபாவிலிருந்து 30 எம்.பி.களும், ராஜ்யசபாவிலிருந்து `10 எம்.பி.,க்களும் இதில் இடம்பெற முடியும். மேலும் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றால் , அதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகிய இரண்டு தரப்புமே ஒப்பு கொள்ள வேண்டும் ,

இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கள் (ஜே.பி.சி)

நம் நாட்டில் முதல் முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு நாட்டின் மிக பெரிய ஊழலாக joint parliamentary committee tamilகருதப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து விசாரணை நடத்த 1987 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ஜே பி சி. விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் அலுவல்களை பலநாட்கள் ஸ்தம்பிக்க செய்தன போர் கொடி தூக்கின. மேலும், அப்போதைய மத்தியநிதி அமைச்சரக இருந்த வி.பி.சிங், ஜே பி சி., அமைக்க வலியுறுத்தி எதிர் கட்சிகளுக்கு ஆதரவாக களம் இறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்க ஒப்பு கொண்டது தனிக்கதை .

1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் 1,000 கோடிரூபாய் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

1999 முதல் 2001 ம் ஆண்டு வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி ஊழல் செய்த கேதன் பரேக்கின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த முன்றாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த நான்காவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...