வளர்ச்சியை ஏற்படுத்தாத, எந்த ஒரு ஆட்சியும் நீடிக்காது

 வளர்ச்சியை ஏற்படுத்தாத, எந்த ஒரு ஆட்சியும் நீடிக்காது; மக்கள் அதை போன்ற ஆட்சியை விரும்புவதில்லை,” என்று , சென்னை வந்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறினார்.

சென்னையில் நடந்த பிரபல தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள,வந்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தமிழக, பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர், வரவேற்றனர்.

அங்கு அமைக்கப் பட்டிருந்த பிரத்யேக மேடையில் ஏறி, அங்கு கூடியிருந்த_தொண்டர்களை பார்த்து கை அசைத்த மோடி, பேசியதாவது: மக்களுக்கு, வளர்ச்சிப்பசி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சியை ஏற்படுத்தாத எந்த ஒரு ஆட்சியும், இனி நீடிக்கமுடியாது. வளர்ச்சியை உருவாக்காத ஆட்சியை, மக்கள் விரும்பு வதில்லை. பா.ஜ.க., மட்டுமே மக்களுக்கு நன்மைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என்பதை, நான் பெருமைபட கூறுவேன்.குஜராத்மக்களின் வளர்ச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் பாதை அமைத்து கொடுத்ததால்தான், அங்கு மீண்டும், அமோகவெற்றி பெற்று, முதல்வராக என்னால், பதவியேற்க முடிந்தது.

மத்தியில் இருக்கும் ஐ.மு.கூட்டணி அரசு, நாட்டை பின்நோக்கி அழைத்துச்செல்கிறது. மக்கள் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் உருப்படியாக செயல்படுத்த வில்லை. இந்த ஆட்சியால், மக்கள் பெரும்ஏமாற்றம் அடைந்துள்ளனர். விவேகானந்தரின், 150வது ஆண்டுவிழாவை, நாம் கொண்டாடி வருகிறோம். இந்த தருணத்தில், நாட்டுமக்களுக்கு ஒரு நல்ல_ஆட்சி ஏற்பட பாடுபடுவோம் என்ற உறுதிமொழியை, அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்.என்று நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...