நாட்டின் முதல் பிரதமர், நேருவை போன்று , குஜராத் முதல்வர், நரேந்திர மோடியும் மிகவும் பிரபலமானவர், என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால் கருத்து தெரிவித்துள்ளார்.
உ.பி., ஆமதாபாத்தில் நடைபெற்றுவரும், கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அசோக் சிங்கால் கூறியதாவது: ஒட்டுமொத்தமாக, நாட்டின் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் பிரதமர், ஜவகர்லால்நேரு; அதே போன்றதொரு நிலை இப்போது முதல் முறையாக நிலவுகிறது.
அடுத்த பிரதமராக, நரேந்திர மோடியே வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அரசியலுக்காக, நாட்டில் அமைதியைகெடுக்க எங்கள் இயக்கம் ஒரு போதும் முயன்றதில்லை; அது எங்களது விருப்பமும்மல்ல. விஸ்வ இந்து பரிஷத், இந்து சமுதாயத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டது. இந்துக்களின் கனவை நனவாக்குவது குறித்து விஸ்வ இந்து பரிஷத் செயலாற்றிவருகிறது. என்று அசோக் சிங்கால் தெரிவித்தார்.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.