கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ் 2

 கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ்  2கனையலால் மற்றும் சத்தியேந்திரநாத் போஸ் ஆகிய இருவரும் நாராயண் கோஸ்வாமியின் கால்களை ஆளுக்கொன்றாய் பிடித்து அவன் உடலை கிழித்தே கொன்ற வீர வரலாற்றினை கடந்த பதிவுகளில் பார்த்தோம்.

அப்ருவராகி, அரசாங்க ஆதரவு பெற்று விடுதலையாகலாம் என்று எண்ணிய துரோகியை நிரந்தர விடுதலை கொடுத்து உலகத்தை விட்டே அனுப்பி கொண்டிருந்த போது சத்தம் கேட்டு ஓடி வந்த அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து உதைத்தனர். சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகினர்,

நாராயண் கோஸ்வாமியை கொன்றதற்காக அவர்கள் மீது தனியாக ஒரு கொலை வழக்கு போட்டு இருவரையும் தனித்தனியே தூக்கிலிட்டனர்.

இவ்வளவுதானா வீரசாகஸம் ? பானர்ஜி என்ற போலிஸ் அதிகாரி அரசாங்கத் தரப்பில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தார், வரும் போதே யாரோ ஒருவர் அவரை கோர்ட்டு வாசலிலேயே குருவி சுடுவது போல சுட்டுக் கொன்றுவிட்டார், சுட்டது யார் என்று கடைசிவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை வெள்ளைய போலிஸுக்கு!

செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்த போது சர்க்கார் தரப்பு வழக்கறிஞரான அசுதேஸ் பிஸ்வாஸை, சாரு சந்திர ராய் என்ற இளைஞன் சுட்டுவிட்டு , தூக்கு கயிற்றில் "வந்தே மாதரம்" என்று முழங்கிய படியே செத்துப்போனான், உயர்நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வந்த சம்சுவ் ஆலம் என்ற டெபுடி போலிஸ் சூப்பிரண்டென்டை இன்னொரு சுத்த வீரன் சத்தமில்லாமல் கொன்றுவிட்டு , சாவு தனக்கு துச்சம் என்று சொல்லாமல் சொன்னான்.!

இப்படி வியப்புக்கு மேல் வியப்பு, திகைப்புக்கு மேல் திகைப்பு, என்று தொடர்ந்து கொண்டே போன இந்த அலிப்பூர் சதி வழக்கினை, ஆங்கில அரசு இ.பி.கோ. 121, 121A, 122, 123 ஆகிய செக்ஷன்களின் மீது தொடுத்து நடத்தினர்.

அரவிந்தருக்கும் , இதர எதிரிகளுக்கும் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஆஜராகி, அரசு தரப்பு வாதத்தினை பொடி பொடியாக்கினர், இவ்வளவுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் தங்களின் குற்றங்களை மறுக்கவோ மறைக்கவோ இல்லை,

இந்த வழக்கின் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான பரிந்திரகுமார் கோஷ் கொடுத்த வாக்குமூலம் ஒவ்வொரு இந்தியனும் எண்ணி எண்ணி பெருமை கொள்ளத்தக்க வீர காவியம் ஆகும்.. இது பற்றி அடுத்த பதிவுகளில் பதிவு செய்கிறேன்.

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...