இந்தியாவுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் கண்டிக்க தக்கது , ஐ.மு.கூட்டணி ஆட்சியில் எல்லா துறைகளிலும் கொள்ளை பெருகிவிட்டது. நிலக்கரி, தொலைத்தொடர்பு, ராணுவம் என்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இவர்கள் எந்தவிதமான பாரதத்தை
ஏற்படுத்த நினைக்கிறார்கள்? முதலாளிகளை மட்டுமே முன்னேற்ற நினைக்கிறார்களா? என்று பேசிய பாஜக. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; கடந்த ஓராண்டாக இந்த ஹெலிகாப்டர்களை விற்கும் ஆர்டரைபெற இத்தாலிய நிறுவனம் இந்தியர்களுக்கு லஞ்சம்கொடுத்த விவகாரம் குறித்த சர்ச்சை தொடர்ந்துவருகிறது. இந்த சர்ச்சையின்மீது ஆரம்ப கட்டத்திலேயே மத்திய அரசு விசாரணைநடத்த முன்வராதது ஏன்?
ஹெலிகாப்டரை விற்றநிறுவனம் இத்தாலி நாட்டுக்கு சொந்தமானது என்பதால் தான் இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைந்து செயல்படவில்லை என்பது தெளிவாகிறது.
இந்த பிரச்சினையை பாஜக. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் பெரியபிரச்சினையாக முன்வைத்து போராடும் என்றார்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.