கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்துகொண்டு கண்ணாடி மணியை
பொறுக்குகிறவன் ஒரு மதிகெட்டவன். அந்த வைரச்சுரங்கம்தான் கடவுள். ஆவிகள் பறக்கும் தேவதைகள் போன்ற பிதற்றல்களை நம்பிக்கடவுளை மறப்பவர்கள் மதியிலிகள். அப்படி செய்வது ஒருவித நோய். கோளாறானநிலை. இது மனித இனத்தை இழிவுபடுத்துகின்றது. நரம்புத்தளர்ச்சியுண்டாக்குகிறது.மூளையை பலவீனப்படுத்துகிறது. இந்தப் பண்படாத கதைகள், பேய்களைக் கண்டுஅஞ்சும் நோய் நிலையில் நம்மை வைக்கின்றன. அல்லது புதுமை காணும்அவாவைத் துாண்டுகின்றன. இன்னும் இயற்கைக்கு மாறான நரம்புகள் முறுக்கேறியநிலைக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.