நாடாளுமன்ற அமைப்புகளை காங்கிரஸ் கட்சி சுய நலத்துக்காக பயன் படுத்துகிறது

 அரசியல் லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்புகளை காங்கிரஸ்கட்சி சுய நலத்துடன் பயன் படுத்துகிறது என்று பா.ஜ.க., தலைவர் வெங்கய்யநாயுடு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் மேலும் பேசியதாவது:

நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி.) வரைவு அறிக்கைமூலம் தொலைத் தொடர்பு துறையில் நடைபெற்ற ஊழலை காங்கிரஸ்கட்சி ஒட்டு மொத்தமாக மறைக்க பார்க்கிறது. இந்தவிவகாரத்தில் ஜேபிசி. தலைவர் பிசி.சாக்கோ ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார்.

இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஜேபிசி. கூட்டத்தில் தானாகமுன்வந்து ஆஜராகி உண்மையை விளக்குவதாக சொல்வதை ஜே.பி.சி. ஏன் ஏற்கமறுக்கிறது.

மொத்தமுள்ள 30 ஜேபிசி. உறுப்பினர்களில் 15பேர் ஜேபிசி. தலைவரின் நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்து அவர்மீது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் 2ஜி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மீது களங்கம் சுமத்த அவருடைய பெயரை ஜேபிசி. அறிக்கையில் சேர்க்க துடிக்கிறார்கள்.

ஊழல் குற்றச் சாட்டிலிருந்து தங்களை காத்துகொள்ள சிபிஐ, நுண்ணறிவுப்பிரிவு, அமலாக்க துறை, ஜேபிசி. உள்ளிட்ட நாடாளுமன்ற அமைப்புகளை சுய நலத்துடன் காங்கிரஸ் அரசு பயன் படுத்துகிறது.

நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை மூடிமறைத்து பிரதமரை காப்பாற்ற சி.பி.ஐ அறிக்கையில் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தம்செய்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியைத்தொடரும் உரிமையை தார்மீக ரீதியாக இழந்து விட்டது என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...