தமிழும் சமஸ்க்ருதமும் என் இரு கண்கள்.PART 3

 மந்திரங்கள் மந்திரங்கள் எனச் சொல்லப்படுபவை, இப்படி பல வகையான ஆற்றல் தன்மைகளை கொண்ட ஒலித் துகள்களின் சங்கமம் ஆகிறது. ஓம் எனும் ப்ரணவத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அது மூன்று வகையான ஒலித் துகள்களை கொண்டது. அவை அ, உ,ம் ஆகியன. அ, உ, ம என்று நாம் எழுத்துக்களாய் அதை எழுதினாலும், அவற்றை உச்சரிக்கும் முறையை

வைத்தே அவை சரியான ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. ஆகவேதான் மந்திரங்கள் எனப்படுபவை சரியான உச்சரிப்பை ஆதாரமாகக் கொண்டது. ஒரு மந்திரத்தின் ஆற்றல் சரியான முறையில் வெளிப்பட வேண்டும் என்றால் அதன் உச்சரிப்பு சரி வர அமைய வேண்டும்.

அடுத்து உச்சரிப்பை எப்படி செம்மையாக்க முடியும். அதற்குதான் குருவின் பங்கு மிகவும் முக்கியம். ஒரு நல்ல குருவால்தான் ஆற்றல் மிகுந்த மந்திர ஒலியை சரி வர உச்சரிக்க சொல்லித்தர முடியும். அதனால்தான் வேதங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக எழுதப்படாமல் இருந்தன. சமஸ்க்ருதத்தின் சூட்சுமமான ஒலியை எந்த எழுத்தாலும் சரியாக பிரதிபலிக்க முடியாது. மிகவும் சிறிய அளவிலான மாத்திரை இடைவெளி மாறினாலே அவற்றின் அர்த்தம் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகையால்தான் வேதங்கள் குரு பரம்பரை வாயிலாக மிகவும் செம்மையான முறையில் கற்றுத் தரப்படுகிறது.

வேதங்களை சுருக்கமாக ஆறு அங்கங்களாக பிரிக்கலாம். வேதத்தை அத்யயனம் செய்து அதை எப்படி உச்சரிப்பது என்பதை "ஷிக்ஷை" என்பது விளக்குகிறது. அதன் இலக்கணத்தை "வ்யாகரணம்" விளக்குகிறது. அதன் அளவு, நீளம் ஆகியவற்றை "சந்தஸ்" விளக்குகிறது, அந்த சொல்லின் ஆதாரம் மற்றும் அதன் வளர்ச்சியை "நிருக்தம்" விளக்குகிறது, அதை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும என்பதை "ஜ்யோதிஷ்" விளக்குகிறது. அதை எப்படி செய்ய வேண்டும் என்று "கல்பம்" விளக்குகிறது. இப்படி அற்புதமான, ஒப்பற்ற‌ கட்டமைப்பில் வேதம் அமைக்கப்பட்டுள்ளது.

சமஸ்க்ருதத்தில் பொருள் இல்லாத சொல்லே இல்லை . ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேர்ச்சொல் அதற்கே உரிய பொருள் உண்டு. கணித சூத்திரங்கள் போல, சம்ஸ்க்ருத மொழியும் சூத்திரங்களால் ஆனது. இந்த சூத்திரங்கள் தெரிந்தாலே போதும், மொழியின் அத்தனை வார்த்தைகளையும், அவற்றின் பயன் பாடுகளையும் உபயோகப் படுத்த முடியும். ஆனால் அந்த சூத்திரங்கள் தான் எண்ணிக்கையற்று இருக்கின்றன. ஆயினும் ஒவ்வொரு படியாக கற்பது சாத்தியமே.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியனாய் பிறந்த ஒவ்வொரு மனிதனும் சம்ஸ்க்ருதம் எனும் இந்த ஒப்பற்ற ஞான மொழியை குறித்து சிறிதாவது அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான். அளவற்ற, இனையற்ற பொக்கிஷங்கள் இவற்றில் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு இந்தியனும் உலகை பார்த்து "பாரடா எங்கள் பாரம்பரியத்தை" என்று மார்தட்ட வேண்டும். ஆனால் நம்மில் பலரை அது ஏதோ அந்நிய மொழி என்பது போல் உருவகம் செய்து, நமக்கே அம்மொழியை அந்நிய மொழியாக்கிய பெருமை வெள்ளையர்களையும், இன்றைய திராவிட கொள்ளையர்களையும் சேரும்.

சமஸ்க்ருதம் பிராமனரின் மொழி என்று ஒரு நிலை நிறுத்தலையும், இந்த சூழ்ச்சிக்காரர்கள் செய்துவிட்டார்கள். சமஸ்க்ருதத்தின் மிக‌ச் சிறந்த கவியான காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ பிறப்பால் பிராமனக் குலத்தை சேர்ந்தவர்கள் அல்ல. காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவர், வால்மீகியோ ஒரு திருடர். ஆகையால் சமஸ்க்ருதம் ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்ற சொல்வது பெரும் தவறு.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் கலாச்சாரத்தை அழிப்பதற்காக ஆங்கில முறைக் கல்வியை கொண்டு வர நினைத்தார்கள். ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் மெக்காலே எந்த அளவு நமது நாட்டுக் கல்வியை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டார் என்பது நன்கு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. அதன் விளைவாக நமது நாட்டு பாரம்பரியக் கல்வி முறையை கற்க ஆர்வம் குறைவு பட்டது. பல சமஸ்க்ருத பாடசாலைகள், பல்கலைகழகங்கள் அதனால் மூடப்பட்டன. கணிதம், வானவியல், மருத்துவம் என்று நமது பாரம்பரிய ஞானம் மிக ஆழமானது. அத்தகைய அறிவு மேலும் ஆழமாக அறியப் படவே இல்லை. சுமார் நாற்பது லட்சம் ஏடுகள் இன்னும் ஆய்வுக்கு ஆட்படாமலே இருக்கின்றன. இது வரை சுமார் பத்தாயிரம் போல எடுத்து படித்து பகுத்து வைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களாகிய நாம் நம் பாரம்பரியத்தை குறித்து நிறைய ஆராய வேண்டும். "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" எனும் வள்ளுவனின் வாக்குக்கு இனங்க, "வடமொழி", "ஆரிய மொழி" என்று பிரிவினைவாதிகளும், அந்நிய சக்திகளும் நம்மை பிளக்க நினைப்பதை நாம் புறக்கனித்து விட்டு, உண்மையை ஆராயும் பக்குவத்தை வளர்ந்திக் கொள்ள வேண்டும். நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பல மான்புகளையும் நாம் வெளிக் கொண்டுவர கடமை பட்டுள்ளோம். அதைப்போலவே நம் மற்றொரு கண்ணான‌ சமஸ்க்ருதம் எனும் ஞான மொழியையும் நாம் ஆராய்ந்து, நம் முன்னோர்களின் அறிவு செழுமையை பற்றிக் கொள்ள வேண்டும்.

"சமஸ்க்ருதம்" என்பது எளிய மொழி. சம்யக் (நன்றாக) + க்ருதம் (செய்யப்பட்டது) = சம்ஸ்க்ருதம், அதாவது நன்றாக உருவாக்கப்பட்டது என்பதே அதன் பொருள். அதை நாம் கற்போம், நம் அடுத்த தலைமுறைக்கும் அதை எடுத்துச் செல்ல நாம் ஆசைப்படுவோம்.

ப்ருஹதாரன்ய உபநிடத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் உங்களுக்காக‌

काममय एवायं पुरुष इति। स यथाकामो भवति तत्क्रतुर्भवति।
यत्क्रतुर्भवति तत्कर्म कुरुते। यत्कर्म कुरुते तदभिसंपद्यते॥

ஒருவன் எப்படிப்பட்டவன் என்பது, அவனின் ஆழமான ஆசைகளை பொறுத்தது,
அவனின் ஆசைகளை பொறுத்தே அவனின் லட்சியம் இருக்கிறது,
அவனின் லட்சியத்தை பொறுத்தே அவனின் செயல்கள் இருக்கின்றன.
அவனின் செயல்களை பொறுத்தே, அவனின் வாழ்க்கை இருக்கிறது

Thanks; Enlightened Master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...