இந்திய எல்லைக்குள் உலோகதகடால் ஆன சாலையை அமைக்கும் சீனா

 இந்திய எல்லைக்குள் உலோகதகடால் ஆன சாலையை அமைக்கும் சீனா இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்ந்து நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஊடுருவிய பகுதியிலிருந்து வாபஸ் பெற்றுச் சென்ற படைகள் மீண்டும் அதே லடாக்பகுதிக்குள் ஊடுருவி வந்துள்ளன. அத்துடன் ‘ஸ்ரீ ஜாப்’ பகுதியில் ‘பிங்கர்-8′ என்ற இடத்திலிருந்து

‘பிங்கர்-6′ என்ற இடம் வரை 5 கி.மீ தூரத்துக்கு ‘மெட்டல்’ சாலையையும் சீனபடைகள் அமைத்துள்ளன. மேலும் இந்திய வீரர்களை எல்லை கட்டுப்பாடுகோடு பகுதிக்கு செல்வதையும் சீனராணுவத்தினர் தடுக்கின்றனர்.

காஷ்மீரின் லடாக்பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி சீன ராணுவத்தினர் 19 கி.மீ. ஊடுருவி கூடாரம் அமைத்தனர். எல்லைபகுதியில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இந்தியபகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ்பெற்றதாக சீனா அறிவித்தது.

இதையடுத்து, பிரச்னைமுடிந்ததாக கருதப்பட்ட நிலையில், எல்லையில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டுவருகின்றனர். லடாக் பகுதியில் அமைந்துள்ள சிரி ஜாப் என்ற இடத்தில் எல்லை கட்டுப்பாட்டுகோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் 5 கிமீ. தூரத்துக்கு உலோகதகடால் ஆன சாலையை சீன ராணுவத்தினர் அமைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தபகுதி தங்களுக்கு சொந்தமான அக்சாய்சின் என்ற இடத்தின் ஒருபகுதி என்றும் சீனா தெரிவித்துள்ளது. அந்தபகுதிக்கு அடிக்கடி சீனராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து செல்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...