பயங்கரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும் என பாகிஸ்தானிடம் சீனா வலியுறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி கேட்டு கொண்டுள்ளார்,
சீனாவில் சுற்று பயணம் மேற்-கொண்டுள்ள பாரதிய ஜனதா தலைவர் நிதின்-கட்காரி சீன அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது;
எல்லை கடந்த தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவருகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் ஆதரவு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவே அமையும் .பாகிஸ்தானுக்கு சீனாவழங்கும் அணுஉலைகள் மற்றும் ராணுவ-உதவிகள் அனைத்தையும் இந்தியாவுக்கு எதிராக-பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு . அதனால் பாகிஸ்தான் உடனான தனது நட்ப்பை பயன்படுத்தி தீவிரவாதத்தை தூண்டும்செயல்களை நிறுத்தும்-படி சீனா வற்ப்புறுத்த வேண்டும்.
அருணாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர்-மக்களுக்கு சீனா அரசு தனிவிசா வழங்கி வருவது குறித்த பாரதிய ஜனதா,வின் எதிர்ப்பை சீன உயர் அதிகாரிகளிடம் சுட்டி காட்டியுள்ளேன். பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கிய இந்தியபகுதியான காஷ்மீரில் 5,000 சதுர கி.மீ., பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது பற்றியும் எடுத்துரைத்தேன்.இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.