தி.மு.க எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்

 தி.மு.க எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு விசா வழங்கக்கூடாது என அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர்வெளியிட்ட அறிக்கை:

அமெரிக்காசெல்ல நரேந்திரமோடிக்கு விசா அளிக்கக்கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு ஒபாமாவுக்கு கடிதம் எழுதியதாக செய்திகள்வந்துள்ளன.

ஆனால் அந்த கையெழுத்தினை தாங்கள்போடவில்லை என்றும், இந்தப்பிரச்னையை குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க.,வின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் (கருணாநிதி) தொடர்பு கொண்டு கேட்டபோது, தாங்கள் அவ்வாறு கையெழுத்திடவில்லை என மறுத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும், எந்தவொரு கடிதத்திலும் தான் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுத்துள்ளார். தி.மு.க.,வைப் பொருத்தவரை மத்திய அரசின் எந்தவொரு வெளிநாட்டு கொள்கையிலும் அதன் உள்விவகாரங்களிலும் குறுக்கிடுவதில்லை.

ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் தி.மு.க.,வினர் யாரும் கையெழுத்திட வில்லை என்று கூறிய போதிலும், அவ்வாறு கையெழுத்திடுவதை தி.மு.க தலைமை ஏற்கவில்லை. தலைமையைக் கலந்துபேசாமல் எவறேனும் அவ்வாறு கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...