பாராளுமன்றதேர்தலில் தேசிய அளவில் 3வது அணி அமைய வாய்ப்பில்லை. நரேந்திர மோடி பிரதமராவது காலத்தினகட்டாயம். கடந்த 40 வருடங்களில் இல்லாதளவிற்கு நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பிறகு நாடு முழுவதும் இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; மோடி என்பது அனைவருக்கும் தெரிந்தபெயராக வீட்டுக்கு வீடு பேசப்பட்டுவருகிறது. திமுக. இருக்கும் அணியில் அதிமுக. இருக்காது. கம்யூனிஸ்டுகள் இருக்கும் அணியில் மம்தா இருக்கமாட்டார். முலாயம்சிங் இருக்கும் அணியில் மாயாவதி இருக்கமாட்டார். அதனால் பாராளுமன்ற தேர்தலில் 3வது அணிக்கு சாத்தியமில்லை.
தவறுக்குமேல் தவறுகள் செய்து வருவதால் மக்கள் வெறுப்படைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய முடிவெடுத்து விட்டனர். அது நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான். திருச்சியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் இளந்தாமரை மாநாட்டில் மாலை 3மணிக்கு நிகழ்ச்சிதொடங்கி 7 மணிக்கு நிறைவடையும்.
இதில் அகில இந்தியஇளைஞரணி தலைவர் அனுராத் தாக்கூர், அகில இந்திய பொதுசெயலாளர் முரளிதர் ராவ், கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசியபின் நரேந்திர மோடி இளைஞரணி மாநாட்டு தலைமை உரையாற்றி பாராளுமன்றதேர்தல் பிரசார தொடக்கமாக உரையாற்றுவார்.
தேசிய நலனில் அக்கறையுள்ள தமிழருவிமணியன் போன்றவர்கள் தேமுதிக., மதிமுக. ஆகியகட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்வதை பாஜக ஆதரிக்கிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒருபெண் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அந்நாட்டினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்கள் மறுக்கும்நிலையில் அந்நியநாட்டை சேர்ந்த சோனியா காந்தி பிரதமராகவோ அல்லது அரசுக்கு தலைமை வகிக்கவோ எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.