நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளில் அத்வானியும், முதல்வர் நரேந்திரமோடியும் இணைந்து பங்கேற்றனர். அவற்றில் உள்கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் ஆய்வு கல்வி நிறுவனத்தொடக்க விழாவும் ஒன்றாகும். அந்த விழாவில் அத்வானி பேசியதாவது;
மத்தியில் அடுத்த அரசை அமைக்கும்வாய்ப்பு எங்களுக்கு (பாஜக) கிடைத்தால், நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பதில் மகிழ்ச்சிய அடைவோம்.
நான் இங்கு வந்த போது, இக்கல்வி நிறுவன அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நாட்டில் உள்கட்டமைப்பை ஒரு பாடமாகப்போதிக்கும் கல்விநிறுவனம் ஏதாவது இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என பதில் தந்தார் .
நரேந்திரமோடி எப்போதுமே நம்மால் புதுமையாக ஏதாவது செய்யமுடியுமா, புது முன்முயற்சியை எடுக்கமுடியுமா என்று சிந்திப்பார். நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நம் நாட்டில் மட்டுமின்றி உலகம்முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன என்றார் அத்வானி.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.