நரேந்திர மோடி இந்தியாவை உலகவல்லரசு நாடாக மாற்றுவார்

 கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது. அவர், ''மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து

துறைகளும் தோற்றுப்போய் உள்ளது. விலை வாசி உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகாத மந்திரிகளை காட்டமுடியாது. பிரதமர் முதல் பெரும்பாலான மந்திரிகள் ஊழலில் சிக்கியுள்ளனர். ஸ்பெக்டரம் ஊழலில் முன்னாள் மத்திய மந்திரி ராசா சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்பெக்டரம் பிரச்சினையில் தொடர்புடைய பிரதமர் மற்றும் மத்தியமந்திரி ப. சிதம்பரத்தையும் சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

தற்போது நிலக்கரிஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமர் குற்றவாளி என அந்ததுறை செயலாளரே கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு அதுதொடர்பான ஆவணங்களை களவு செய்துவிட்டது.

அதே சமயம் பாஜக ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்த போது விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி உலகளவில் இந்தியா சாதனைபடைத்தது. அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கையைமீறி இந்த சாதனையை வாஜ்பாய் அரசு படைத்தது.

மேலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நமதுநட்பு பலமாக விளங்கியது. கன்னியாகுமரி–காஷ்மீர் தங்கநாற்கர சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது போக்குவரத்து சீர்அடைந்து நாடு முன்னேற்றம் அடைகிறது.

ஊழல்களின் மொத்த உருவமாக ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. நரேந்திர மோடியை பிரதமராக்கினால் ஊழல் அற்ற நல்லாட்சியை கொடுப்பார். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். குஜராத்தை இந்தியாவில் முதல் மாநில மாக்கியதுபோல் இந்தியாவை உலகவல்லரசு நாடாக முதன்மை நாடாக மாற்றுவார்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கும்முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்க நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...