தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்

 காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.,வின் நோக்கம்,தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்  என பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் நடந்த பா.ஜ.க.,வின் இந்தியாவை வெல்ல செய்வோம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவின் தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வறுமை, வேலையில்லாமை போன்ற பல்வேறுபிரச்னைகள் தலை விரித்தாடுகின்றன. அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் விண்ணைமுட்டும் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது.

இப்பிரச்னைகளில் இருந்து விடுபடவேண்டுமானால், காங்கிரஸ்கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கவேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.,வின் தலையாய நோக்கமாக உள்ளது. பா.ஜ.க மக்கள் பிரச்னைகளை தீர்க்கமுனைப்புடன் செயலாற்றும். நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண திட்டம் வகுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளது. இதனால் நாட்டில் பயங்கரவாதம்போன்ற பிரச்னைகள் பூதாகரமாகியுள்ளது.

நாட்டின் எல்லையில் நமது வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தினாலும், எல்லைப்பகுதியில் சீனா அக்கிரமித்தாலும் பிரதமர் மன்மோகன் சிங் மௌனம்காப்பதை தவிர, உறுதியான பதிலடிகொடுக்க தவறிவிட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் அதிலிருந்து மீண்டும்வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பாராட்டும்படி இல்லை. தேனீர்விற்றவர் பிரதமர் ஆகமுடியாது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...