வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்ய யாருக்கும் தைரியம் இல்லை

 இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்ட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன்?, வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கேள்வி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜேட்லி மேலும் தெரிவித்திருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியும், வீரபத்ரசிங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க பார்க்கின்றனர். அதற்குப் பின்னால் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் அமைதியாக ஒளிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை.

இது தொடர்பாக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யும்படி சி.பி.ஐ இயக்குநருக்கு டிசம்பர் 29ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

தில்லி சிறப்புபோலீஸ் சட்டப் பிரிவு 6ன்படி இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் அனுமதி தேவை எனக் கூறப்படுகிறது.

எனவே, இமாசலப்பிரதேச அரசு அனுமதி கொடுத்தால், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடக்கும். அனுமதிகொடுக்க மாநில அரசுக்கு தைரியம் உள்ளதா? என்று அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...