கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தலைமைத்தேர்தல் ஆணையம் முடிவு

 தேசியபாதுகாப்பை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல் படும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தலைமைத்தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்தமுடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் மக்களவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் சேவைகளை மேம்படுத்த கூகுளுடன் கைகோக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை 6 மாதங்களுக்கு நிர்வகிக்கும்பொறுப்பு கூகுளிடம் ஒப்படைக்கப்பட இருந்தது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் சர்வர்களை பயன் படுத்திக்கொள்ள அண்மையில் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்நிலையில் சுமார் 80 கோடி வாக்காளர்களின் தகவல்களை கொண்டுள்ள தேர்தல் ஆணைய இணையதளக்கட்டுப்பாடு கூகுள் கைவசம் மாறினால் தேசப்பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பாஜக , காங்கிரஸ், தகவல்தொடர்புத்துறை நிபுணர்கள் என்று அனைத்து தரப்பினரும் எச்சரித்தனர்.

இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் விஎஸ். சம்பத் தலைமையில் டெல்லியில் வியாழக் கிழமை உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் எச்எஸ்.பிரம்மா, எஸ்என்ஏ. ஜைதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக்கூட்டத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல் படும் திட்டத்தைக் கைவிட ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...